Connect with us

வந்தேமாதரம் ; நீதிமன்றத்தின் வேண்டாத வேலை

Latest News

வந்தேமாதரம் ; நீதிமன்றத்தின் வேண்டாத வேலை

குழப்பங்களுக்கு நீதிமன்றங்கள் அச்சாரம் போடுவது அதிகரிக்கிறது.

இருக்கும் பிரச்னைகள் போதாதென்று இவர்கள் ஊக்கமிகுதியால் இடும் உத்தரவுகள் புது பிரச்னைகளை உருவாக்குகிறது.

ஜனகணமன – சினிமா தியேட்டர்களில் பாட வேண்டும் என்ற உத்தரவு என்ன ஆனது?     யார் மதித்தார்கள் ?

சினிமா பார்க்க வந்தவனிடம் உன் நாட்டு பற்றை  காட்டு என்று யார் கேட்டார்கள்?

ஏற்கனெவே இந்தி  திணிப்பு  எதிர்ப்பு உணர்வு நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.

திடீரென்று  அகில இந்திய வானொலி தமிழ் செய்திகளை நிறுத்துகிறது.    யார் கேட்பது?

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தியை திணிக்க முயல்வது.    கண்டனம்  பெரிதாக இருந்தால் வாலை சுருட்டிக் கொள்வது.  ?    சமயம் பார்த்து மீண்டும் நீட்டுவது?       பா ஜ க அரசில்    இது சகஜம் என்றால் நீதிமன்றம் ஏன் இந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்?

அது சம்ஸ்க்ருதத்தில் இருந்தால் என்ன வங்காள மொழியில் இருந்தால் என்ன?    இரண்டும் எனக்கு வேற்று மொழிகள்!

இரண்டுமே எனக்கு தெரியாது.  எனக்கு தெரிய வேண்டிய மொழிகள் தெரிந்தால் போதும்.

வந்தேமாதரம் பாடல் சமஸ்கிருத மொழியில் இருப்பதால் பாட மாட்டோம் என்பதல்ல.     மொழி தெரியாத  ஒருவனின் வாயிலும்  நுழையாத வார்த்தைகள் கொண்ட பாடல் அது.

‘  புல்ல குசுமித த்ரிமதல பாஷினி’   என்று மொழி தெரியாதவனை பாட சொன்னால் என்ன செய்வான்?

இந்தியா என்தாய் நாடாம்!    அதை என் தாய் மொழி தமிழில் வாழ்த்தி பாட வேண்டாமாம்!   சமஸ்க்ரிதத்தில் பாடி என் நாட்டு பற்றை வெளிக்காட்ட வேண்டுமாம்?

நீதிபதியே  யாரையும் கட்டாயப் படுத்த வேண்டாம்.   வெறுப்பை வளர்க்கும்.    வேண்டுமென்றால் மொழி பெயர்த்து அவரவர் தாய் மொழியில் பாடுங்கள் என்று வேறு அறிவுரை கூறியிருக்கிறார்.

எத்தனை மொழிகளில் யார் யாரை பாட வைப்பீர்கள் ?

அரசு விழாக்களில் துவக்கத்தில் இசை வடிவில் வந்தேமாதரத்தையும் நிறைவில் தேசிய கீதத்தையும் இசைத்தால் போதாதா?

இதுவும் ஒரு வகை வதை.

பாரதி பாடியதை ஏன் தமிழ் நாட்டில் துவக்க விழா பாடலாக ஏற்றுக் கொள்ளக் கூடாது?

‘   வாழிய செந்தமிழ்

வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திரு நாடு ”

வந்தேமாதரம் , வந்தேமாதரம்”

இதைவிட வேறு என்ன வேண்டும்?

தமிழ் தமிழர் வார்த்தைகள் அவர்களுக்கு கசக்கும்.     பாரதம் , இந்தியர் வார்த்தைகள் மட்டுமே இனிக்கும்.

நடைமுறைக்கு ஒருபோதும் வரப் போவதில்லை இந்த உத்தரவு??!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top