Connect with us

நிதிப்பற்றாக்குறை ரூ 40,530 கோடி; எடப்பாடி அரசின் மோசமான நிதி நிர்வாகம்?!

tamil-nadu-assembly-trust-vote-ops-eps

தமிழக அரசியல்

நிதிப்பற்றாக்குறை ரூ 40,530 கோடி; எடப்பாடி அரசின் மோசமான நிதி நிர்வாகம்?!

2017-18 ம்  ஆண்டில்  தமிழக அரசின் நிதிப் பற்றாகுறை ரூ   40,530 கோடி என்றும் தமிழ்நாடு மூன்றாவது பெரிய பற்றாக் குறை மாநிலம்  ரிசர்வ் வங்கி வெளியிட்ட வெளியீட்டில் இருந்து தெரிய வருகிறது.

அரசியல் நிலைத்தன்மை இல்லாதது அரசு  எந்திரம் முழு அளவில் செயல்படாதது புதிய தொழில் வரத்து இல்லாதது போன்றவை காரணம் என்கிறார்கள்.

Fiscal Responsibility and Budget Management Act ன் படி நிதிபற்றாக்குறை வட்டி செலவு மொத்தக்கடன் ஆகியன     3% அளவில் இருக்க வேண்டும் என்ற வரையறையை தமிழக அரசு எட்டிவிட்டதாகவும் அதனால்  14 வது நிதிக்கமிஷனின் பரிந்துரைகள் ஏற்கப் படுவதில் சிரமங்கள் ஏற்படலாம் எனவும் டெல்லி தேசிய பொது  நிதி மற்றும் கொள்கை இன்ஸ்டிட்யூட் பேராசிரியர் என் ஆர் பானுமூர்த்தி சொல்கிறார்.

இதற்கெல்லாம் தமிழ்நாடு உதய் திட்டத்தில் சேர்ந்ததுதான் காரணம் என்ற தமிழக அரசின் வாதம் தவறு என்றும் மகாராஷ்டிரா  குஜராத் மாநிலங்கள் எல்லாம் உதய் திட்டத்தில் சேர்ந்தும் அதனால் இழப்பை சந்திக்க வில்லைஎன்பதும் சுட்டி காட்டப் படுகிறது.

அரசின் வருவாய் உயராததுதான் காரணம்.   அதை அரசு  ஒப்புக்  கொள்ள வேண்டும்.

அடுத்து தொழிற்சாலைகள் அதன் முழு உற்பத்தி திறனில் செயல்பட்டால் மட்டுமே அரசிற்கு வருவாய் உயரும் எனவும் அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கவனிக்கத் தக்கது.

அரசும் தன் செலவினங்களை குறைக்க திட்டமிட வேண்டும்.  அதை அரசு செய்கிரதாப் இன்றால் இல்லை என்பதே பதில் .

ஆக அரசின் தவறான நிதி க் கொள்கையினால் பாதிக்கப் படப் போவது என்னவோ பொதுமக்களே??!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top