Connect with us

தேர்தலில் தோற்றவர்களை நியமன உறுப்பினர்களாக்கினார் புதுச்சேரி ஆளுநர் பேடி ??!!

Latest News

தேர்தலில் தோற்றவர்களை நியமன உறுப்பினர்களாக்கினார் புதுச்சேரி ஆளுநர் பேடி ??!!

தேர்தலில் நின்று ஆயிரத்து ஐநூறு வாக்குகள் வாங்கி டிபாசிட் பறிகொடுத்தவர் புதுச்சேரி மாநில பா ஜ க தலைவர் சாமிநாதன்.   பொருளாளர் சங்கர் மற்றும் கல்வியாளர் செல்வகணபதி மூவரையும் புதுச்சேரி சட்ட மன்றத்துக்கு நியமன  உறுப்பினர்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட அதை ஆட்சேபித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டவுடன் அவசர அவசரமாக அவர்களுக்கு மாநில அரசுக்கு சொல்லாமல் சபாநாயகருக்கு சொல்லாமல் பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார் ஆளுநர் பேடி.

அரசு ஊழியராக இல்லாமல் இருந்தால் போதும் என்ற விதியை தவறாக பயன்படுத்தி நியமனம் செய்திருக்கிறார் பேடி.

பா ஜ க நியமித்த மூவரில் இருவர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனவாம்.     அரசியலில் நேர்மை பற்றி பேசும் பா ஜ க தனக்கு என்று வந்த பிறகு நேர்மையை எல்லாம் தூக்கி  எறிந்துவிட்டு செயல்படும் என்று நிரூபித்து விட்டது.

வழக்கு நிலுவையில் உள்ளது. மாநில அரசை கலந்து கொள்ளாமல் எடுத்த முடிவு இது.

நீதிமன்றத்திலாவது நீதிகிடைக்குமா  என்று பார்ப்போம் !

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top