Connect with us

பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவியை இடைநீக்கம் செய்த அரசு கல்லூரி?

இந்திய அரசியல்

பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவியை இடைநீக்கம் செய்த அரசு கல்லூரி?

கேட்பதற்கே அருவருப்பாக இருக்கிறதா இல்லையா?

ஒரு அரசு கல்லூரியில் சுதந்திர போராட்ட வீரரும் போராட்டத்தில் தன் இன்னுயிரை ஈந்தவரும் ஆன மாவீரன் பகத்சிங்கின் பிறந்த நாளை கொண்டாடிய குற்றத்திற்காக எம்.ஏ வரலாறு முதல் ஆண்டு படிக்கும் மாணவி மாலதியை கோவை அரசு கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

குற்றம் என்ன? செப்டம்பர் மாதம் 28 ம் தேதி பகத் சிங்கின் பிறந்த நாளை ஒட்டி இதர மாணவர்களுடன் சேர்ந்து 45 நிமிடம் அவரைப்பற்றி புகழ்ந்து பேசி கலைந்ததுதான்.

மாணவர்கள் எந்த விதத்திலும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது.

இப்போது அனுமதித்தால் பிறகு எல்லா பிரச்னைகளிலும் தலையிடுவார்கள் .

முதலில் கல்லூரியில் விழா நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள்.  அனுமதி மறுத்த முதல்வர் வேண்டுமானால் துறையின் தலைவரிடம் அனுமதி பெற்று துறை அளவில் நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

துறைத் தலைவர் விடுப்பில் இருந்ததால் அதற்கடுத்த நிலை ஆசிரியர் அனுமதி மறுத்திருக்கிறார். எனவேதான் மாணவர்கள் விழாவை நடத்தி இருக்கிறார்கள்.

எதிர்த்து குரல் கொடுப்பவர்களை தேச துரோகம், ஊபா சட்டம் என்கிற சட்ட விரோத அமைப்புகள் தடுப்பு சட்டம் போன்ற வழக்குகளில் நடவடிக்கை எடுத்து முடக்குவது என்ற மோசமான போக்கை மாநில அரசு மட்டுமல்லாமல் கல்லூரிகளும் கடைபிடிக்க தொடங்கி இருப்பது மிகவும் ஆபத்தானது.

முதல்வர் சித்ரா அக்டோபர் 22 ம் தேதி விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று சொல்லி இருகிறார்.

கல்லூரிகள், உரிமைகளுக்கு  குரல் கொடுக்க மாணவர்களை தயார் செய்ய வேண்டும். முடக்கக் கூடாது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top