Latest News

சிவாஜி கணேசன் சிலை; அரசின் ரெட்டை வேடம்!!!

Share

சிவாஜி கணேசன் சிலையை மரினா கடற்கரையில் இருந்து தூக்க வேண்டும் என்று ஒரு மேல்தட்டு மேன்மகன் உயர்நீதி மன்றத்தை நாடுகிறார்.

அப்போது இருந்த மாநில  தி மு க அரசு சிலை இருக்கும் இடம் ஒரு ‘ போக்குவரத்து தீவு ‘  (traffic island)  என்று வாக்குமூலம் தாக்கல் செய்கிறது.   அதாவது சிலை இருக்கும் இடம் எந்த வகையிலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்காது என்று.

பின்னால் வந்த அ தி மு க அரசு நிலையை மாற்றி  கொண்டு விட்டது.   நீதிமன்றமும் ஏன் அரசு நிலை மாற்றியது என்று கேட்கவில்லை.

கடைசியில் மணி மண்டபம் கட்டி அங்கு கொண்டு போய் கட்டம் கட்டி விட்டார்கள்.

சிலை இருந்த இடத்துக்கு பக்கத்தில்  அதே ரோட்டில் கடிகாரம் இருக்கிறது. அசோகா சக்கரம் இருக்கிறது.   அதற்கெல்லாம் எந்த பாதிப்பும் இல்லை. ஆட்சேபனையும் இல்லை.    நடு ரோட்டில் நாடு முழுதும் அண்ணா , எம்ஜியார்,   காமராஜர்  ஏன் மன்றோ  சிலைகள் உள்பட பல இருக்கின்றன.

சிவாஜி சிலை மட்டும் ஏன் இவர்கள் கண்களை உறுத்த வேண்டும்?

அவர்கள் நினைத்தால் சட்டத்தை வளைத்து எதையும் சாதிப்பார்கள் எண்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு காவடி தூக்கிகளாக இருந்தால் தான் நீடிக்க முடியும் என்பதால் அடிமைகள் ஆட்சி நீடிக்கிறது.

This website uses cookies.