Connect with us

சர்கார்- செங்கோல் திரைக்கதை சண்டை ??~~!!

vijay-sarkar

பொழுதுபோக்கு

சர்கார்- செங்கோல் திரைக்கதை சண்டை ??~~!!

சர்கார்- செங்கோல் திரைக்கதை சண்டை.

காலங்காலமாக நடைபெற்று வருவது தான் சினிமா கதை காபிரைட் சண்டை.

அதில் விஜய் நடித்து தீபாவளிக்கு வர இருக்கும் சர்கார் படமும் சேர்ந்துள்ளது.   இந்த செங்கோல் திரைக்கதையை பத்து வருடத்திற்கு முன்பு எழுத்தாளர் சங்கத்தில் வருண் என்கிற ராஜேந்திரன் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

அந்த கதையை திருடிதான் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கி இருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் ஆட்சேபனை இரண்டும் வெவ்வேறு கதைகள் என்பது. எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் ஆறு பேர் இரண்டும் வேறு வேறு கதைகள் என்று சொன்ன நிலையில் தலைவர் பாக்கியராஜ் 5 உறுப்பினர்களை ஆதரவை மட்டும் வைத்து இரண்டும் ஒரே கதைதான் என்று கடிதம் கொடுப்பது எப்படி என்று அவர் கேள்வி கேட்கிறார் .   

கரு ஒன்றாக இருந்தால் கதையும் ஒன்றுதான் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? கர்ணன் கதையை கருவாகக் கொண்டது தான் இயக்குனர் மணிரத்தினம் தயாரித்த ரஜினிகாந்த்தின் தளபதி படம். ஆனால் ட்ரீட்மெண்ட் வேறு.   

ஒரே தன்மை கொண்டதாக பல கதைகள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உண்டு.  ஆனால் அந்த கருவை எப்படி மெருகேற்றி ட்ரீட்மென்ட் செய்து சம்பவங்களை புதிதாக கற்பனை செய்து அந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறார்கள் என்பது தான் கேள்வி?     

இரண்டுக்குமே கதையின் மையக்கரு ஒன்றுதான் என்பது தான் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் கருத்து. கதாநாயகனின் ஓட்டை வேறு யாரோ போட்டு விடுகிறார்கள். அதற்கு கதாநாயகன் காணும் தீர்வு என்ன ? இதுதான் கரு என்றால் அது போதுமா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. 

முருகதாசை மிரட்டி பணம் வாங்குவதற்கு செய்த சூழ்ச்சிக்கு கே.பாக்யராஜ் துணை போனாரா அல்லது கருவைத் திருடி படம் எடுத்துவிட்டு ட்ரீட்மெண்ட் வேறு கொடுத்தேன் என்று சொல்லி ஏஆர் முருகதாஸ் தப்பிக்க பார்க்கிறாரா என்பதை நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் நம்மால் சொல்லமுடியும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி.   

சினிமா எடுப்பவர்கள் எல்லோரும் மனச்சான்றின் படிதான் நடக்கிறார்களா என்பது  கேள்விக்குறிதான். மீ டூ சம்பவங்கள் காட்டும் உண்மை இதுதான். 

இதில் நடிகர் விஜய் ஏன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை? அவர் வெறும் கதாநாயகனாக மட்டும் இருந்திருந்தால் இந்தக் கேள்விக்கு இடம் இருந்திருக்காது. அவர்தான் வருங்காலத் தலைவராக உருவகப் படுத்தப் பட்டு வருகிறாரே? எனக்குத் தெரியாது என்ற ஒற்றை வரியோடு அவரின் பங்கு முடிந்து விடுமா என்ன?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in பொழுதுபோக்கு

To Top