Connect with us

ஷாருக்கான் 50 கோடி பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக அவதூறு?

shahrukh-khan

பொழுதுபோக்கு

ஷாருக்கான் 50 கோடி பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக அவதூறு?

வாட்ஸ் அப்பில் உலா வரும் ஒரு வதந்தி இந்தி நடிகர் ஷாருக்கான் பாகிஸ்தானில் கொரானா பாதிப்பை ஈடுகட்ட ரூபா ஐம்பது கோடி கொடுதுள்ளார் என்பது.

அதை உ பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசுவதாக அமைத்திருக்கிறார்கள்.

விசாரித்ததில் அந்த செய்தி போலி எனத் தெரிகிறது. திட்டமிட்டு முஸ்லிம் நடிகர்கள் மீது மதவெறி சாயம் பூச ஒரு கூட்டம் அலைகிறது.

ஷாருக் முஸ்லிமாக இருந்தாலும் அவர் ஒரு  இந்து பெண்ணை திருமணம் செய்து அவர் மனைவி  இந்துவாகவும் இவர் முஸ்லிமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் தங்கள் மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்

இருந்தாலும் மதவெறிக் கூட்டம் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தி நடிகர் அக்சய் குமார் 25 கோடி ரூபாய்  சொந்த பணத்தில் இருந்து கொடுத்து எல்லாருடைய மரியாதையை யும் பெற்றார்.

நல்லதை பாராட்டுவோம். அதற்காக முஸ்லிம்களை குறிவைத்து பொய்ப் பிரச்சாரம் செய்வதை அரசு அனுமதிக்கக் கூடாது.

அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் அரசும் இதற்கு  மறைமுக ஆதரவு  என்றுதான் பொருள்படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in பொழுதுபோக்கு

To Top