Connect with us

சட்ட மன்றத்தில் ஜெயலலிதா காலில் விழுந்தாரா ஒ பன்னீர்செல்வம்?

Latest News

சட்ட மன்றத்தில் ஜெயலலிதா காலில் விழுந்தாரா ஒ பன்னீர்செல்வம்?

அ தி மு க பொதுக் குழு கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தும்முன் செருப்பை கழட்டி விட்டு நெடுஞ்சாண் கிடையாக ஜெயலலிதா முன்பு விழுந்து வணங்கி விட்டு பேசத் துவங்கினார் என்று செய்திகள் வந்தன.

அதுவாவது அவர்களின் கட்சிக் கூட்டம். தங்கள் தலைவியின் காலில் விழுவதை அவர்கள் பாக்கியமாக நினைத்தால் அது அவர்களுக்கும் அவர்கள் தலைமைக்கும் உள்ள பிரச்சினை. மற்றவர்கள் கருத்து சொல்வது கூட தேவை இல்லாதது.

ஆனால் சட்ட மன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஒ பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் காலில் விழுந்து ஆசி வாங்கி விட்டு பேச துவங்கினார் என்று செய்திகள் வந்தன. இதை தமிழக அரசின் சார்பில் யாரும் தவறு என்று மறுக்க வில்லை.

இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழகமே வெட்கி தலை குனிய வேண்டிய தகவல் இது.
அரசியலில் நிலைத்து நிற்பதற்காக எதையும் செய்ய தயார் என்ற நிலைக்கு அரசியல்வாதிகள் தள்ளப் பட்டு விட்டால் எதிர்காலத்தை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.
பொதுத் தேர்தலில்தான் மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top