Connect with us

ஒரே நாடு ஒரே தேர்தல்; மோடி , அமித்ஷாவின் சர்வாதிகார கனவு ?!

இந்திய அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல்; மோடி , அமித்ஷாவின் சர்வாதிகார கனவு ?!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பா ஜ க வின் கனவு.
பிரதமர் மோடி அடிக்கடி இந்தக் கனவுக்கு உருவம் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
ஆனால் நடக்கவே முடியாத கனவு இது.
அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தலோடு
29 மாநிலங்களுக்கும் தேர்தல் கொண்டு வர இருவருக்கும் ஆசை.

வாஜ்பாய் வெல்வோம் என்று நம்பி – 2004 ல்
தேர்தலை முன்கூட்டியே நடத்தினார்- தோற்றார்
எனவே இவர்கள் நம்புவது நடக்குமா என்பது வேறு
மோடியின் செல்வாக்கில் பல மாநிலங்களில் ஆட்சியை
பிடிக்கவும் தக்க வைக்கவும் ஆசை.

சட்ட கமிஷனின் தலைவர் பதவி முடியும் முன்
அதன் தலைவர் சௌஹன் எல்லோரையும்
கலந்து கொண்டு ஒரே தேர்தலாக நடத்த
அழைப்பு விடுத்திருக்கிறார்
மத்திய அரசின் விருப்பத்தின் படிதான் இந்த அழைப்பா?
எல்லா கட்சிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்
அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்
சில சட்ட மன்ற ஆயுளை கூட்ட வேண்டும்
சில வற்றின் ஆயுளை குறைக்க வேண்டும்
இவையெல்லாம் நடக்க கூடியதா?

ஐந்து வருடம் தேர்ந்தெடுக்கப்படும்
மாநில அரசோ மத்திய அரசோ
முழுக்காலத்தையும் நிறைவு செய்யும்
என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இடைப்பட்ட காலங்களில் மத்திய அரசு
அதிகாரத்தை கைப்பற்றும் வாய்ப்புகள் தான் அதிகம்.
அது ஜனநாயகத்துக்கு நல்லதா?
1967 க்குப் பிறகு ஒரே தேர்தலாக நடத்த முடியவில்லையே ஏன்?
செலவு மிச்சம் என்றால் மக்களின் குரலுக்கு மதிப்பு ?

மோடியின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாக
ஒரே நாடு ஒரே தேர்தல் சேரப்போகிறது.
ஒரே தேர்தல் ஒரே கல்வி ஒரே மொழி
ஒரே மதம் ஒரே மருத்துவம் கடைசியில்
ஒரே கல்லறை – இதுதானா உங்கள் ஆசை மோடி அவர்களே?!
நூறு பூக்கள் பூக்கட்டும் என்றார் மாவோ
பன்மையில் ஒருமைத்தன்மை ( Unity in Diversity)
அதுதான் இந்தியாவின் அழகு முகம்
பன்மைத்தன்மையை போற்றுவோம்
இந்தியாவுக்கு வலிவும் வளமையும் தரும்
மந்திரம் அது ஒன்றே ?!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top