Connect with us

மழை வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்யும் தமிழர்கள் இருக்கிறார்களே?!

தமிழக அரசியல்

மழை வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்யும் தமிழர்கள் இருக்கிறார்களே?!

பக்திக்கும் நம்பிக்கைக்கும் எல்லை இல்லை.

ஆனால் அது அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்.

வேம்பு அரச மரங்களுக்கு திருமணம் செய்வித்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கையின் அடிப்படை அந்த மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.

அதற்காக அவைகளுக்கு பத்திரிகை அடித்து திருமணம் செய்விக்க முடிவு செய்த திருவாரூர் மாவட்டம் தில்லை விளாகம் கிராமத்தில் தமிழர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

அதிர்ச்சி தரும் வகையில் இரண்டு மரங்களும் ஒரு சேர பட்டுப் போனதால் திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்.

பட்டுப் போக நீர் பற்றாகுறை உள்ளிட்ட இயற்கை காரணங்கள் இருக்கலாம்.   ஆனால் அதற்காக மக்களின் மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் நம்பிக்கை இத்தனை தூரம் போக வேண்டுமா என்பதை அம்மக்கள் சிந்திக்க வேண்டும்.

பெரியாரின் சீர்திருத்த இயக்கம் இன்னும் வேரூன்ற வில்லை என்பதை இது காட்டுகிறதா என்று தெரியவில்லை.

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி தொண்டர்களை சீர்திருத்த பாதைக்கு ஓரளவு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top