Connect with us

உள்ளாட்சிகளுக்கு மீண்டும் மறைமுக தேர்தல் ஏன் ? ஜெயலலிதாவின் திடீர் முடிவுகள் ??!!

jayalalitha-election

தமிழக அரசியல்

உள்ளாட்சிகளுக்கு மீண்டும் மறைமுக தேர்தல் ஏன் ? ஜெயலலிதாவின் திடீர் முடிவுகள் ??!!

தமிழ்நாட்டில் பிரச்னைகளை  திசை திருப்ப ஜெயலலிதா  அடுத்தடுத்து பல பொருளற்ற சில்லறை காரியங்களை செய்து கொண்டிருப்பது வழக்க மாகி விட்டது.

அமைச்சர்கள் மாற்றம் , அதிகாரிகள் மாற்றம்  கட்சி நிர்வாகிகள் மாற்றம் என்று நாளுக்கொரு அறிவுப்புகள் தன்னை தூக்கி நிறுத்தும் என்றும் தன் மீதான அச்சத்தை அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா நம்புகிறார்.

முன்பு உறுப்பினர்கள் சேர்ந்து தலைவரை உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுத்து வந்தார்கள்.   அதை மாற்றி தலைவரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வகை செய்தவர் ஜெயலலிதா.

இப்போது மீண்டும் மேயரையும் நகராட்சி  பேரூராட்சி தலைவரையும் அந்தந்த மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய ஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.

தோல்வி பயமா?    அல்லது ஆட்சி அதிகாரத்தை வைத்து செலவைக் குறைத்து மீண்டும் அராஜக வழியில் எல்லாவற்றையும் கைப்பற்றி விட முடிவா?

பொதுத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் கண்ட குறைகளையே தேர்தல்  ஆணையம் சரி செய்ய வில்லை.       அப்பொழுதும் பணம் தான் வெற்றியை முடிவு செய்தது.     அந்த வாக்காளர் பட்டியலை வைத்து நடத்தப் படும் தேர்தலில் என்ன மாற்றத்தை கொண்டு வந்து விட முடியும்?

அகில இந்திய தேர்தல் ஆணையம் செய்ய முடியாததை மாநில அரசின் கட்டுபாட்டில் இருக்கும் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்து விட முடியும்?

சட்ட மன்றத்திலேயே  ஒரு அமைச்சர் காலில் விழுகிறார்.    உறுப்பினர் நடராஜ் முதன் முதலில் பேசி முடிக்கும் போது கபாலி ஸ்டைலில்  ”  அம்மாடா ” என்று முடிக்கிறார்.  ஒரு அமைச்சர் ஆமாம் நாங்கள் எல்லாம் அடிமைகள்தான் என்று பெருமையுடன் பேசுகிறார்.     சட்ட மன்றம் தனது மாண்பை  இழந்து வெளிறி நிற்கிறது.

ஆண்கள் எல்லாம் அடிமைகள்தான் என்று குப்புற விழுந்து கிடக்கும்போது  ஒருபெண் மட்டும் தன்னால் எதிர்த்தும் நிற்க முடியும் என்று களத்தில் நிற்கிறார்.   அவர்தான் சசிகலா புஷ்பா.     பிணை கிடைக்குமா இன்னும் பின்னப்பட இருக்கும் சதி வலைகளில் இருந்து அவரால் மீண்டு வர முடியுமா என்பதை காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.

மக்களின்கவனத்தை திசை திருப்ப இம்மாதிரி அறிவிப்புகள் உதவலாமே தவிர வேறு எந்த பலனையும் இந்த முடிவு யாருக்கும் அளிக்கப் போவதில்லை.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top