Connect with us

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப் பட்டால் அங்கு ஊழல் சாதனைகளை பட்டியல் இடுவார்களா?

Latest News

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப் பட்டால் அங்கு ஊழல் சாதனைகளை பட்டியல் இடுவார்களா?

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப் படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

அது சந்தியா பெயரில் ஜெயலலிதா வாங்கிய சொத்து.    பின்னர்  அதை தன் சொந்த செலவில் நூறு மடங்கு விலை மதிப்புள்ளதாக ஜெயலலிதா ஆக்கினார்.

சட்டப்படி அண்ணன் மகன் தீபக் மகள் தீபா இருவருக்கும் சொந்தமாக வேண்டியது.

அரசு எடுத்தால் கூட அவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டி வரும்.

யார் கேட்டார்கள் இந்த கோரிக்கையை?      யாரை திருப்தி படுத்த இந்த நடவடிக்கை?

ஏற்கனெவே ஜெயலலிதா என்ற நபர் மக்களால் பின் பற்ற தக்கவர் அல்ல  என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஊழலின் ஊற்றுக்கண் அவர்.     நிர்வாகத் திறமை இருந்ததா என்பது  வேறு.

பெரியாரின் கழகத்தை நீர்த்துப் போகச் செய்த உள் நோக்கம் கொண்ட பிராமணியத்தின் பிரதிநிதி என்று  பலராலும் புரிந்து கொள்ளப் பட்ட அரசியல்வாதி.

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி ஜெயலலிதா முதல் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்கு அளிக்கப் பட்ட நான்காண்டு சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க முடியாமல் இறந்ததால் வழக்கு அற்றுப் போய் விட்டது..

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு என்ன இடத்தை அரசும் சமுதாயமும் கொடுக்க வேண்டும். ?

சமுதாயத்தின் அனைத்து மக்களும் அனைத்தும் பெற வேண்டும் என்று பல திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலும் அவைகள் மட்டும் போதுமா போற்றுவதற்கு?

அனைத்து மட்டத்திலும் ஊழலையும்  விதைத்தாரா இல்லையா?

ஊழலுக்கு பரிசு கொடுப்பதும் பாராட்டுவதும் போற்றுவதும் இந்த பாழாய்ப் போன நாட்டில் தான் நடக்கும்.

ஜெயலலிதாவை பாராட்டுவதும் ஊழலை ஊஞ்சல் போட்டு தாலாட்டுவதும் ஒன்றுதான்.

நினைவகம் சாதனை செய்தவர்களுக்கு மட்டும்தான்.      ஊழல் செய்தவர்களுக்குமா ?

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top