Connect with us

அதிகாரிகளை விட்டு விட்டு ப சிதம்பரத்தை மட்டும் குற்றவாளி ஆக்குவது ஏன்?

pa-chidambaram

சட்டம்

அதிகாரிகளை விட்டு விட்டு ப சிதம்பரத்தை மட்டும் குற்றவாளி ஆக்குவது ஏன்?

நேற்றைய தினம் ப சிதம்பரத்தை சிறையில் சந்தித்து சோனியாவும் மன்மோகன் சிங்கும் ஆறுதல் கூறினர்.

அப்போது மன்மோகன் சிங் எழுப்பிய கேள்விகள் மிக முக்கியமானவை.

‘ப. சிதம்பரம் துறையில் ஒரு டஜன் அதிகாரிகள் ஆராய்ந்து செய்த பரிந்துரையை ப சிதம்பரம் இறுதியில் ஒப்புதல் அளித்து இறுதிக் கையெழுத்து இட்டிருக்கிறார். அதில் இறுதி ஒப்புதல் அளித்த சிதம்பரம் மட்டுமே தவறு இழைத்ததாக எப்படி கருத முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மன்மோகன்சிங்.

அதிலும் ஆறு பேர் உயர் தகுதி  படைத்த செயலாளர்கள். அந்த செயலாளர்கள் ப.சிதம்பரம் சொல்லித்தான் தாங்கள் பரிந்துரை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா?

அப்படியே ஒரு அமைச்சர் அழுத்தம் கொடுத்ததால் பரிந்துரை செய்தோம் என்றாலும் அதுவும் தவறாக போய் விடுமே? அப்போது யார் அழுத்தம் கொடுத்தாலும் இவர்கள் கேட்பார்கள் என்று ஆகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இப்போது யார் சொல்லி இப்படி சொல்கிறார்கள் என்ற கேள்வியும் எழுமே?

சிதம்பரமும் செயலாளர்கள் செய்த பரிந்துரை தவறு என்று சொல்லவில்லை.

பின்னர் தவறு எங்கே நிகழ்ந்திருக்கிறது.

நீதிமன்றங்கள் இந்தக் கேள்வியை கேட்காததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in சட்டம்

To Top