Connect with us

சிபெட் தலைமையகத்தை சென்னையிலிருந்து டெல்லிக்கு கொண்டு சொல்லும் அனந்தகுமார்??!!

ananth-kumar

Latest News

சிபெட் தலைமையகத்தை சென்னையிலிருந்து டெல்லிக்கு கொண்டு சொல்லும் அனந்தகுமார்??!!

சிபெட் என்னும் ( Central Institute of Plastics Engineering and Technology)    பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிறுவனம்  சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல் பட்டு வருகிறது.

23   கிளைகளில்   44000  மாணவர்கள்  பயிற்சி பெற்று வரும் இந்த மையத்தில் தற்போது        39   கிளைகளாக மாற்றப்பட்டு      65000  மாணவர்களை கொண்டு இயக்க திட்டமிட்டு வருகிறது மைய அரசு.

கர்நாடகாவை சேர்ந்த அனந்த குமார் அமைச்சராக இருப்பதால் அவர் இதன் தலைமையிடத்தை டெல்லிக்கு மாற்றப் போவதாக வந்த செய்திகளை அடுத்து தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது .    கலைஞரும் தொழிலாளர்களும் ஏனைய கட்சித் தலைவர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதை தொடர்ந்து அனந்த குமார் வேடிக்கையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதாவது தலைமையிடம் சென்னையில்தான் இருக்குமாம். அதேசமயம் டெல்லியில் மற்றொரு தலைமையகம் அமைப்பதற்கான   தேவை ஏற்பட்டு உள்ளதாம்.

மாற்று தலைமையகம் என்பது கேள்விப்பட்டத ஒன்று.      தேவை ஏற்படும்போது   ரீஜினல் என்ற வகையில் பிராந்திய தலைமையகங்களை அமைப்பதுவழக்கம்.

ஒரே தலைமையகம்தான் இருக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் ஓர்  அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள்.

தென் மாநிலம் ஒன்றில் ஒரு தேசிய அமைப்பின் தலைமையகம் இருக்கக்கூடாதா??

தேசிய கட்சியில் இருந்து கொண்டு தேசியத்துக்கு விரோதமாக சிந்திக்க எப்படித்தான் இவர்களால் முடிகிறதோ??

எத்தனை பிராந்திய அலுவலகங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்   ஆனால் ஒரே தலைமையகம்தான் இருக்க முடியும்.

இதைக்கூட புரிந்து கொள்ள முடியாமலா இருப்பார்கள் தமிழர்கள்?

கன்னடர் ஒருவர் சென்னையில் தன் துறை அமைச்சகத்தின் தலைமையிடம் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதால் ஏற்பட்ட மாற்றம்  என்பதே உண்மை.   அவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top