Connect with us

ஆளுநர் மூலம் காலூன்றப் பார்க்கும் காவிக் கட்சி

modi vidhyasagar rao

Latest News

ஆளுநர் மூலம் காலூன்றப் பார்க்கும் காவிக் கட்சி

உத்தரகாண்ட் , அருணாச்சல பிரதேசம்               போன்ற வட மாநிலங்களில் நடந்தது எல்லாம் இப்போது தமிழகத்தில் நடக்கிறது.

என்னவெல்லாம் செய்து ஆட்சியை கைப்பற்ற பா ஜ க நாடகம் நடத்தியது என்பதை கவனித்தால் இங்கு நடப்பது ஒன்றும் ஆச்சரியம் தராது.

சசிகலா-ஓ பி எஸ் இவர்களில் யார் தகுதியானவர்கள் என்பது அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒன்று.

ஆளுநரின் நடத்தை யை மட்டும் விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டால் சதி வெளிவரும்.

ஒ பி எஸ்         ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன் ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும்?   அடுத்து யார் ஆட்சி செய்ய அனுமதிப்பது என்பது மட்டுமே அவரது வேலை.      அனுமதி அளிக்கப்  பட்டவர் சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் .

ஆளுநர் செய்த தாமதத்தின் விளைவாக இரு தரப்பிலும் குதிரை பேரம் அதிகமாகி விட்டது.

ஆளுநர் மூத்த பா ஜ க தலைவர் என்பது அவர் யார் நன்மைக்காக பாடு படுவார் என்பதற்கு விடை தரும். இத்தனை நாள் அவர் காத்து வரும் மௌனம் உள் நோக்கம் கொண்டது .    பா ஜ க வின் திட்டத்திற்கு துணை போகும் நோக்கம் என்பது எல்லாருக்கும் புரிந்தே இருக்கிறது.

எது நடந்தாலும் அது  பா ஜ க காலூன்ற இடம் கொடுத்து விடக் கூடாது என்பது மட்டுமே நமக்கு கவலை.

தமிழகத்தில் ஆட்சி என்பது இருக்கிறதா என்பதே கேள்வியாகி விட்டது.

ஒருவழியாக ஜல்லிக்கட்டு நடத்தப் பட்டது என்பது மட்டுமே  ஆறுதல் அளிக்கும் செய்தி.

மெரினாவில் மாணவர்கள் நடத்திய , உலகமே அதிசயித்த , புரட்சிப் போராட்டம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்த நிலையில் இப்போது நடக்கும் மல்லுக்கட்டு தமிழர்களுக்கு இழிவைத் தந்து விட்டது.

அவாள் கள் எல்லாம் ஒரே குரலில் பேசுகிறார்கள்.      அதிலிருந்தே புரிந்து விட்டது யார் விலை  போய் விட்டார்கள் என்று.      தேவைப் படும்போது அவர்கள் வெளியே வருவார்கள்.      அதுவரை சாது வேடம் போடுவார்கள்.

கரூர் அன்புநாதன் -சேகர் ரெட்டி தொடர்பான ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பத்தப்பட்ட வழக்கில் ஓ பி எஸ்  சேர்க்கப் படாதது மட்டுமல்ல , அவர்கள் மீதும் கூட நடவடிக்கை தீவிரமாக இல்லை.   நத்தம் விஸ்வநாதன்  தப்பி விட்டார்.    அருண் ஜெட்லி நன்றாகத்தான் மிரட்டி இருக்கிறார்.

ஏன் எட்டு மாதங்களாக தீர்ப்பு சொல்லாமல் இருந்தீர்கள் என்று யார் உச்ச நீதிமன்றத்தை கேட்பது    ?

தமிழகத்தில் நடக்கும் பல அரசியல் பிரச்னைகளுக்கு , தீர்ப்பு அப்போதே வந்திருந்தால் , தீர்வு கிடைத்திருக்கும்.

தமிழகத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் தன்மை கொண்ட மிக முக்கியமான வழக்கில் உச்ச நீதி மன்றம் நடந்து கொள்வது சகிக்கவே முடியாத ஒன்று.      யார் கேட்பது?

மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதியை உச்ச நீதி மன்றம் இழந்து வருகிறது.     நாட்டுக்கே தலைகுனிவு.

நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும்  அமைப்புகள் எல்லாமே சுய நலமிகளாக இருக்கிறார்களே?

எது வேண்டுமாளாலும் செய்!  அதை உடனே செய்!  ஆளுநரே  தமிழகத்தை  வேட்டைக்காடாக்காதே!!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top