Latest News

தொடரும் மீனவர் படுகொலையும் மோடி அரசின் வஞ்சகமும்???!!!

Share

மீண்டும் ஒரு இந்தய தமிழ் மீனவர் , ப்ரிட்ஜோ  , சிங்கள கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்  பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்தப்  படுகொலை இந்திய கடல் எல்லைக்குள் நடை பெற்றிருக்கிறது.

வழக்கம் போல தமிழக அரசியல் வாதிகளின் கண்டனங்களும் இந்திய அரசின் பொறுப்பான பதிலும் சிங்கள அரசின் மறுப்பும் பதிவாகி இருக்கிறது.

சுப்ரமணியசாமி என்று ஒரு பொறுக்கி வழக்கம் போல ‘ தமிழ்நாட்டில் இந்தப் பொறுக்கிகள் கட்டுமரத்தில் ஏறி சிங்கள கடற்படையுடன் சண்டை போட வேண்டியதுதானே .சாக்க்கடைக்குள் ஏன் ஒளிந்து கொள்கிறார்கள். ‘ என்று ட்விட்டரில் பதிவு செய்கிறான்.

அதை இங்கே எந்த உணர்வுள்ள மனிதன் எவனும் கண்டு கொள்வதில்லை.

கண் துடைப்பாக சிறையில் இருக்கும் இரு நாட்டு மீனவர்களையும் விடுதலை செய்வது என்று இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்கிறார்கள்.

பறிமுதல் செய்யப் பட்டு கிடக்கும் நூற்றுக்கும் மேலான படகுகளை பற்றி யாருமே எதுவும் பேசுவதில்லை.

இலங்கை  கடற்படை சுட்டால் எங்கே போனது இந்திய  கடற்படை?

இந்திய மீனவன் எல்லை தாண்டுகிறான் என்றால் .  எல்லையை காட்டும் கருவி வைத்திருக்கிறாயா?

பாரம்பரிய மாக  எல்லை தாண்டி மீன் பிடிக்கும் உரிமை இரு நாட்டு மீனவர்களுக்கும் இருக்கிறதே.?

இழந்த உயிருக்கு யார் இழப்பீடு தருவது?    என்ன இழப்பீடு?    மீண்டும் நடை பெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.?

இலங்கை பகை நாடு என்று இந்தியா அறிவிக்க வில்லை என்றால் தமழ் நாட்டு அமைப்புகள் அறிவிக்கலாமே?

இந்திய  தமிழ் நிறுவனங்கள் இலங்கையில்  செயல்பட ஆட்சேபிக்கலாமே!

இந்திய தமிழர்கள் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க லாமே !

சட்டத்திற்கு உட்பட்டு இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தமிழ் உணர்வாளர்கள் ஏன் சிந்திக்க வில்லை ?

போர் முடிந்து எட்டாண்டுகள் முடிந்தும் இன்னும் அரசியல் தீர்வு பற்றி சிங்களன் பேச மறுக்கிறான்..

நம் தலையீடு வேண்டாம்.    என்ன தீர்வு என்பதை அந்த நாட்டு தமிழர்களே தீர்மானிக்க வேண்டாமா?

குள்ளநரியும் சிங்களனும் ஒன்று.    அவனை சாதாரணமாக அணுகி  வெல்லவே முடியாது.

ஒரு சம்பவம் நடந்தால் போராட்டம்  நடத்தி ஓய்வதுதான் தமிழன் வழக்கம் .     இது  சிங்களனுக்கு தெரியும்.    அதனால்தான் துணிந்து சுட்டது நாங்கள் அல்ல என்று மறுத்திருக் கிறான்

அடுத்து இடைத்தேர்தலின் தமிழன் கவனம் திரும்பி விடும்.

சிங்கள எதிர்ப்புக் களம் நிரந்தரமாக செயல் பட வேண்டும்.  அது இலங்கை தமிழர் பகை நாடு என்ற முழக்கத்தோடு வெளிப்படையாக தொடர் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.  இந்திய அரசு ஒருபோதும் இலங்கையை பகை நாடாக அறிவிக்காது.   தமிழர்களுக்கு அரசியல் தீர்வையும் பெற்றுத் தராது.

இந்தியாவில் இருந்து கொண்டே இந்திய அரசையும் மீறி இலங்கை பகை நாடு தமிழர்களுக்கு என்ற முழக்கத்தோடு  அறவழியில் தொடர் போராட்டத்தை தமிழகம் முன்னெடுத் தால்தான் சிங்களன் கொஞ்சமாவது அசைந்து கொடுப்பான்.

பிளவுண்டு கிடக்கும் தமிழன் இதை சாதிப்பானா ?

This website uses cookies.