Connect with us

கொள்முதல் நிலையங்களை மூடி டெல்டா விவசாயிகளை பழி வாங்குகிறதா மத்திய அரசு?

தமிழக அரசியல்

கொள்முதல் நிலையங்களை மூடி டெல்டா விவசாயிகளை பழி வாங்குகிறதா மத்திய அரசு?

2022 க்குள் விவசாய விளைபொருட்களின் கொள்முதல்
விலையை இரட்டிப்பாக்குவதாக மோடியின் அறிவிப்பு இருந்தது.
இடையில் பெயரளவுக்கு கொள்முதல் விலையை உயர்த்தியது
அதிருப்தியை ஏற்படுத்தினாலும் தேர்தல் வரும்போதாவது
ஏதாவது உருப்படியாக செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
ஆனால் டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து
விவசாயிகளை மறைமுகமாக விவசாயத்தில் இருந்து
வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய அரசு தொடர்ந்தது.

இந்நிலையில் இப்போது தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல்
நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக
தகவல் வெளியானது அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது.
கடந்த ஆகஸ்டு 31ம் தேதி வரை கொள்முதல் செய்த நெல்லை அரைத்து
அரிசியாக தந்து விட்டு நெல் கொள்முதலை நிறுத்துமாறு மத்திய அரசு
அறிவுறுத்தி இருப்பதாக கூறப்பட்டது.

திடீர் என்று தஞ்சை மாவட்டத்தில் 59 கடலூர் மாவட்டத்தில் 49
விழுப்புரம் மாவட்டத்தில் 15 கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டன.
தமிழகம் முழுவதும் 1500 கொள்முதல் நிலையங்களும்
டெல்டாவில் மட்டும் 600 கொள்முதல் நிலையங்களும் இயங்கி வருகின்றன.
கொடுமை என்னவென்றால் நெல்கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1750 என்று
அறிவிக்கப் பட்டாலும் கொள்முதல் செய்வது என்னவோ
பழைய விலையான ரூபாய் 1550 க்குத்தான்.

இந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்புகள் ஏமாற்றமளிப்பதாக இருக்கின்றன.
இவர்கள் மத்திய அரசின் முகவராகத்தான் செயல் படுகிறார்களாம் . இதில் சில
விதிமுறைகளை ஒட்டித்தான் இந்த மூடல்கள்.
அதாவது பராமரிப்பு பணிக்காக இந்த மூடல்கள் என்று
அமைச்சர் காமராஜ் விளக்கம் தருகிறார்.
கொள்முதல் செய்வதே குறிப்பிட்ட காலத்தில்தான்.
இடையில் உள்ள காலத்தில் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாதா?
எங்கெல்லாம் நெல் வரத்து இருக்கிறதோ எங்கெல்லாம்
நேரடி கொள்முதல் நிலையங்கள் தோடர்ந்து செயல்படும்
என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கேள்வி ஏன் இருக்கும் நிலையங்களை மூடவேண்டும் என்பதுதான்.
ஏற்கெனெவே பல பிரச்னைகளால் நொடித்துப் போயிருக்கும் விவசாயிகளை
மீண்டும் சோதனைக்கு உள்ளாவது அரசுக்குக் நல்லதல்ல.
மாநில சுயாட்சியை வலியுறுத்தி ஆட்சி செய்பவர்கள்
மத்திய ஆட்சியை மட்டுமே நம்பி திட்டங்களை வகுப்பது சரியல்ல.
மத்திய அரசின் பங்கும் இருக்கட்டும்.
நீங்கள் சுயமாக விருத்தி செய்வதை அவர்கள் தடுக்க வில்லையே .
விவசாயிகளிடம் இருந்து எல்லாக் காலத்திலும்
சாகுபடி விளைபொருட்கள் கொள்முதல் செய்யப் படும்
என்று தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும்.
எதற்கும் மத்திய அரசை சாக்கு சொல்லும் போக்கை
கைவிடவேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top