Connect with us

மத்திய அரசில் தொடரும் மேல்சாதி ஆதிக்கம்??!! 27 % த்திற்குப் பதில் வெறும் 12 % பேரே பிற்பட்டோர்???!!!

Latest News

மத்திய அரசில் தொடரும் மேல்சாதி ஆதிக்கம்??!! 27 % த்திற்குப் பதில் வெறும் 12 % பேரே பிற்பட்டோர்???!!!

வி பி சிங் தனது ஆட்சிக் காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகேற்ப மத்திய அரசு வேலைகளில் பிற்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு செய்ய ஆணையிட்டார்.
அதை நேரடியாக எதிர்க்காத பா ஜ க மறைமுகமாக ராமர் கோயில் பிரச்சினையை கிளப்பி வி பி சிங் அரசு தொடர முடியாத அளவுக்கு சதி செய்து ஆட்சியை மாற்றியது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டு வருகிறது என்பதை அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளிக்கொண்டுவந்திருகிறது.

1.1.2015 அன்று நிலவரப்படி ஏ பி சி டி வகை மத்திய அரசு பணியாளர்கள் 79,483 பேரில் 9040 பேர் மட்டுமே பிற்பட்டோர் என்ற அதிர்ச்சித் தகவல் தகவல் உரிமைச் சட்டம் வாயிலாக கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது..
இந்த தகவலை அளித்த துறையும் நியமனங்களை செய்யும் துறையுமான மனித வள மேம்பாட்டுதுறையிலேயே தங்கள் விகிதாசாரத்திற்கு மாறாக தாழ்த்தப்பட்டோர் 12.91 % மும் மலைவாழ் மக்கள் 4% மும் மிகவும் பிற்பட்டோர் 6.67 % மும் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.

குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் ஏ கிரேடு அதிகாரிகளில் யாருமே பிற்பட்டோர் இல்லை.
இன்னும் கொடுமை என்னவென்றால் இந்த தகவல்களை கேட்டால் நாற்பதிற்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் தகவல்களை தருவதில்லை.
எனவேதான் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு அமுல் படுத்தப் படுவதை கண்காணிகக ஒரு தனி அமைப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

விழிப்புணர்வு பெறவேண்டிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் தூங்கிக் கொண்டிருப்பதால் தான் இது சாத்தியமாகிறது.
மத்தியில் புள்ளியியல் துறை என்று ஒன்று இருக்கிறதே அவர்கள் என்னதான் செய்கிறார்கள்??!!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top