Connect with us

கார்ட்டூன் போட்டால் கைதா? எல்லை மீறுகிறது எடப்பாடி அரசு?

Bala-cartoonist-arrest

தமிழக அரசியல்

கார்ட்டூன் போட்டால் கைதா? எல்லை மீறுகிறது எடப்பாடி அரசு?

நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கியது.

நெஞ்சம் பொறுக்காமல் கார்ட்டூனிஸ்ட்  பாலா ஒரு கேலிச்சித்திரம்  கருத்துப்படம் என்கிற கார்ட்டூன் வரைந்திருக்கிறார்.

அதில் மாவட்ட ஆட்சியர் , காவல் துறை கண்காணிப்பாளர் முதல்வர்  மூவரையும் மாவட்ட ஆட்சியர் புகாரின்  பேரில் கைது செய்திருக்கிறார்கள்.

நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்திருக்கிறது.

மூவரும் நிர்வாணமாக இருந்து கொண்டு பணத்தால் தங்கள் மறைவிடத்தை மூடிக்கொள்கிறது போலவும் எதிரில் ஒரு குழந்தை தீயில் மாள்வது போலவும் அந்த படம் இருக்கிறதாம்.

ஆமாம் இந்த கார்ட்டூனை ஆத்திரத்தின் உச்சத்தில்தான் வரைந்தேன் என்றும் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.      ஒரு கொடுமையை காண சகிக்காமல் சமுதாய உணர்வுடைய சாமானிய மனிதனின் உணர்வுகளைத்தான் அந்த சித்திரம் பிரதி பலிக்கிறது.

இதில் எவரையும் தனிப்பட்ட முறையில் இழிவு படுத்தும் எண்ணம் எங்கே எழுகிறது?

ஆட்சியாளர்களுக்கும் இதில் பங்கில்லையா?      பலமுறை புகார் கொடுத்தும் தக்க நடவடிக்கை இல்லாததால் தான் இந்த கொடுமை நிகழ்ந்தது என்பது உண்மைதானே?

துயரத்தில் பங்கேற்று  இனி இவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி அளித்திருந்தால் அரசின் கௌரவம் என்ன குறைந்தா விடும்?

மாறாக கார்ட்டூன் போட்டவரை கைது செய்து தண்டிக்க முயல்வது என்ன நியாயம்?

எல்லாரும் கண்டித்திருக்கிறார்கள்.     அரசு உடனடியாக வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கை முடித்துக் கொள்ள வேண்டும்.

உணர்வுள்ள அரசாக இருந்தால் அதைத்தான் செய்யும்.   இவர்களுக்கு  அது இருக்கிறதா?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top