Connect with us

ஜோதிடத்தால் வீழ்ந்த ‘சரவணபவன்’ ராஜகோபால்??!!

saravana-bhavan-p-rajagopal

மதம்

ஜோதிடத்தால் வீழ்ந்த ‘சரவணபவன்’ ராஜகோபால்??!!

சாமானியர் கூட உழைப்பால் உயர் முடியும் என நிருபித்தவர் சரவணபவன் ‘ அண்ணாச்சி’ ராஜகோபால்.

1981ல் மிகச் சிறிய அளவில் ஓட்டல் தொழிலை தொடங்கிய அவர் குறுகிய காலத்திலேயே வியப்பூட்டும் அளவு தொழிலை விரிவுபடுத்தினார்.

ஜோதிடம் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம் கொண்டவர் ராஜகோபால். திருமுருக கிருபாநந்த வாரியார் சுவாமிகளின் சீடராகவும் இருந்திருக்கிறார்.

இரண்டு மனைவிகளும் குழந்தைகளும் இருக்கும்போது மூன்றாவது திருமணம் செய்தால் மேலும் உச்சத்துக்கு செய்வீர்கள் என்று ஜோதிடர் ஒருவர் சொன்ன ஆலோசனை தான் அவர் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டதாக சொல்கிறார்கள்.

அதற்காக திருமணம் ஆன பெண்ணை அடைய ஆசைப்பட்டு அவர் மறுக்கவே அவரது கணவரை கொலை செய்யும் அளவுக்கு செல்ல வைத்து ஆயுள் தண்டனை பெற வைத்து கடைசியில் அவரது ஆயுள் சிறைக் கைதியாகவே முடிந்துவிட்டது.

ஆன்மிகம் என்பதற்கு உண்மைப் பொருள் என்ன வென்று ஆதிகாலத் தமிழருக்கு தெரிந்திருக்கிறது.

அதில் ஜோதிடம் எல்லாம் இல்லை.

உள்ளே புகுந்து ஆக்கிரமித்துவிட்ட சனாதன தர்மத்தின் குழந்தைகள்தான் மூட நம்பிக்கைகள்.

சரவணபவன் ராஜகோபாலின் மரணம் ஆன்மிகத் தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கை  மணி ?!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in மதம்

To Top