Connect with us

தேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் மோசடிகள்?!

tnpsc

தமிழக அரசியல்

தேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் மோசடிகள்?!

இப்படியுமா செய்வார்கள் என்று மிரள வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் நடத்திய நான்காம் பிரிவு அலுவலர்களுக்கு ஆன தேர்வில் நடந்த ஊழல்கள்.

பிற மாவட்டங்களில்  இருந்து கீழக்கரை ராமநாதபுரம் இரண்டு மையங்களில் மட்டும் தேர்வு எழுத தேர்ந்தெடுத்து  எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சுமார் 99 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதில் பெரும்பாலானோரை நிரந்தர தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டு  இரண்டு வட்டாட்சியர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்து இருக்கிறார்கள்.

மூன்று மணி நேரத்தில் மறைந்து விடும் மையை பயன்படுத்தி எழுதிவிட்டு பின்ப அதில் சரியான பதில்களை பதிவிட்டு ஊழல் செய்திருக்கிறார்கள். அதற்காக  ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ஒன்பது லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறார்கள். 

பிற மையங்களில் இந்த முறைகேடு நடக்கவில்லை என்று தேர்வாணையம் கூறுகிறது.

சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டும் போதாது.   அவற்றை நிறைவேற்றுவதில் கடுமை இல்லா விட்டால் முறைகேடுகளை ஒழிக்கவே முடியாது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top