Connect with us

வெங்கையா நாயுடு பேசுவது நடக்குமா? பின் பேசுவது யாரை ஏமாற்ற??!!

venkaiya-naidu

தமிழக அரசியல்

வெங்கையா நாயுடு பேசுவது நடக்குமா? பின் பேசுவது யாரை ஏமாற்ற??!!

சென்னையில் வெங்கையா நாயுடு தன் புத்தக வெளியீட்டு விழாவில் சில நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

ஆனால் அவைகளை எல்லாம் நடக்க விடாமல் செய்வது மத்தியில் ஆளும் கட்சிதான்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்றார். பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் என்று சாக்கு சொல்லி மறுத்து வருகிறது மத்திய அரசு.

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். சென்னை, மும்பை, கொல்கத்தா என்று மூன்று கிளைகளாவது  வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். தவிர்த்துக் கொண்டிருப்பது மத்திய அரசு.

அதேபோல் கட்சி தாவல் சட்டத்தை கடமையாக்க வேண்டும் என்றும் ஒபிஎஸ்ஐ மேடையில் வைத்துக்கொண்டே பேசியிருக்கிறார். ஊக்கமளித்தது மத்திய அரசு.

வெங்கையா பேசுவது தமிழர்களை ஈர்க்க. செய்யும் இடத்தில இருக்கும் அமித் ஷா ஒன்றும் சொல்ல வில்லை.

ஏதாவது சொல்லி தமிழர்களை ஏமாற்றும் நோக்கில் வெங்கையா பேசியிருப்பார் என்று தோன்ற வில்லை. அவர் இனி தான் அரசியலில் இல்லை என்றாலும் கடைசி  வரை சங்க தொண்டராகத்தான் இருப்பார். அவரது வலையில் தமிழர்கள் விழ தயாராக இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top