Connect with us

குட்கா விற்க நாற்பது கோடி ; ஊழலா தினகரன் ஆதரவு அமைச்சரை மிரட்ட பாஜக திட்டமா?

Latest News

குட்கா விற்க நாற்பது கோடி ; ஊழலா தினகரன் ஆதரவு அமைச்சரை மிரட்ட பாஜக திட்டமா?

வருமானத் துறை அரசியல்வாதிகள் மீது  நடவடிக்கை எடுக்கும்போது சந்தேகம் வருவது இயல்பு.

மாதவராவ் என்பவர் குட்கா தயாரிப்பு நிறுவன பங்குதாரர்.    அவரிடமிருந்து கைப்பற்றப் பட்ட கணக்குப் குறிப்பில் தமிழக அமைச்சர் மற்றும் போலிஸ்  அதிகாரிகளுக்கு நாற்பது கோடிக்கும் அதிகமான லஞ்சம கொடுத்ததாக குறிப்பு இருப்பதாகவும் இது பற்றி விசாரிக்கும்படியும் தமிழக அரசுக்கு வருமானத்துறை கடிதம் எழுதுகிறது.

குட்கா , பான் மசாலா போன்ற தடை செய்யப்  பட்ட பொருட்கள் எல்லா கடைகளிலும் தாராளமாக கிடைக்கிறது.      சட்டத்தை அமுல்படுத்த விரும்புவோர் முதலில் அதை தடை செய்ய நடவடிக்கை  வேண்டும்.

அதே நேரத்தில் பெரும்துகையை  லஞ்சமாக பெற்றுக் கொண்டு அதை அனுமதித்தவர்கள்   பேரிலும் நடவடிக்கை வேண்டும்.

குற்றமிழைத்தவர் ஒரு துண்டு சீட்டில் அரசியல் பிரமுகர் பெயரை எழுதி விட்டால் அவர் குற்றவாளியாகிவிடமாட்டார் .      பா ஜ க வின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு வருமானத் துறை துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் வளர்ந்து கொண்டே போகிறது.

மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக வை ஒரு வழி ஆக்காமல் பா ஜ க விடாது போல் தெரிகிறது.

விஜயபாஸ்கர் தினகரன் ஆதரவாளர் என்று  எல்லாருக்கும் தெரியும்.     ஆர் கே நகர் இடைதேர்தலில் அவர் பெரும் பங்கு ஆற்றினார்.    தேர்தல் நிறுத்தப் பட்டது.

இரு அணிகளின் இணைப்பிற்கும் தினகரன்  தடையாக இருக்கிறார் என்று பா ஜ க நினைக்கிறது.

எனவே தினகரனை எழ விடாமல் செய்ய அவரது ஆதரவாளர்களை மிரட்ட பா ஜ க திட்டமிட்டால்  அது அரசியல் ராஜதந்திரமாகும்.    அதற்கு வருமானத் துறை யை அது பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.   அதைத்தான் தவறு என்கிறோம்.

முதலில் குட்கா தாராளமாக கிடைப்பதை தமிழக அரசு தடை செய்யட்டும்.

நீதிமன்றம்  தலையிட்டு குட்கா விற்க துணை போனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதே நேரத்தில் வருமானத் வரித்துறை அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு துணை போகாமலும் இருக்க  நடவடிக்கை எடுக்கவும் தலையிடும் என்று நம்புகிறோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top