Connect with us

இந்தி படிக்க வேண்டுமாம்- பொன்னார் சொல்கிறார்

Pon-Radhakrishnan

Latest News

இந்தி படிக்க வேண்டுமாம்- பொன்னார் சொல்கிறார்

இந்தி படிக்க வேண்டுமாம்- பொன்னார் சொல்கிறார்
இந்தி படியுங்கள். எத்தனை மொழி  முடியுமோ அத்தனை மொழிகளையும் படியுங்கள். திரு பொன். ராதாகிருஷ்ணன் ,மத்திய துணை அமைச்சர் கன்னியாகுமரியில் பேசிய பேச்சு இது.
பா.ஜ.க  மீது ஏற்கனவே இந்தியை ,சமஸ்க்ரிததை திணிக்க முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பிரதமர் மோடி மீது இந்திய மக்கள் ஒருவித நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதை குலைக்கும் வகையில் செயல்படுவது எந்த வகையிலும் பா.ஜ.க வுக்கு பயனளிக்காது.
ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்ற வகையில்தான் பா.ஜ.க வின் வளர்ச்சி தமிழகத்தில் இருக்கிறது. ஏற்கனேவே இந்தி பிரசார் சபா தமிழகத்தில் செயல்பாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. விரும்புபவர்கள் படித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  அதை யாரும் தடை செய்ய கோரவில்லை.
எந்த வகையிலும் மொழி திணிப்பு  இருக்க கூடாது என்பது மட்டுமே தமிழர்களின் எதிர்பார்ப்பு. 
இப்போதுதான் திருக்குறளை வட இந்தியாவில் அறிமுக படுத்த முயற்சி எடுத்து நல்ல பெயரை எடுத்தீர்கள்.
அதற்குள்ளாக இப்படி பேச வேண்டிய அவசியம் என்ன?   மும்மொழி திட்டத்தை எத்தனை வட மாநிலங்கள் அமுல் படுத்துகின்றன. ?
தேவைப் படுவோர் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கும் போது  ஏதாவது சாக்கு சொல்லி மொழித் திணிப்பில் ஈடுபட்டால் அது எதிர்  மறை விளைவு களையே ஏற்படுத்தும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top