வங்கிகள் பான் கார்டுகள் வழங்கட்டுமே ??!!

Share

மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பது போல் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாதது ஆக்கி கறுப்புப் பணத்தை கட்டுப்  படுத்த நினைக்கிறார் பிரதமர் மோடி.

ஜ ன்   தன் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் இருபத்தி ஐந்து கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு துவங்கியதை சாதனை என்றார்கள்.

இவர்கள்  அனைவரும்  சாமான்ய மக்கள். .  இவர்கள் பான் கார்டு பயன் பாடு பற்றி இதுவரை அறியாதவர்கள்.

அவர்கள் கணக்கில் இதுவரை பணம் இல்லாமல் இருந்து இப்போது பல லட்சக்கணக்கில் டிபாசிட் ஆவது யார்மூலம் என்று  விசாரிக்கப் போகிறார்களாம்.

வங்கி கணக்கை ஆரம்பிக்கும்  போது பெறும் எல்லா தகவல்களை வைத்து ஏன் வங்கிகளே தங்கள் பொறுப்பில் அவர்களுக்கு பான் கார்டுகளை வழங்க கூடாது?   அதற்கு ஒரு கட்டணம் பெற்றுக் கொள்ளட்டும்.

நோக்கம் குறிப்பிட்ட  தொகை களுக்கு மேல் வங்கிப் பரிவர்த்தனை விபரங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு   தெரிய  வேண்டும்.

ஏழைகளை கசக்கிப் பிழியாமல் அரசு தனக்கு வேண்டிய விபரங்களை அவர்களுக் கு   பான் கார்டுகளை வழங்கி  அதன் மூலம் தங்களுக்கு வேண்டிய விபரங்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?!!

 

 

This website uses cookies.