இந்திய அரசியல்

முஸ்லீம்கள் போராட காரணம் இருக்கிறதா இல்லையா ?!

Share

டெல்லியிலும் எல்லா மாநிலங்களிலும் முஸ்லீம்கள் என் பி ஆர் என்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்து போராடி  வருகிறார்கள்.

இதை யாராவது தூண்ட வேண்டுமா என்ன? அவர்களுக்கு  இருக்கும்  அச்சத்தால் போராடுகிறார்கள். அந்த  அச்சத்துக்கு முகாந்திரம் இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும்.

தமிழக அரசு மத்திய அரசின் கூட்டாளி. அவர்களே மூன்று சந்தேகங்களை எழுப்பி பதில் கேட்டிருக்கிறார்கள். அந்த சந்தேகத்தை நீக்கி விட்டால் அச்சம் அகன்று  விடும் அல்லவா?

மத்திய அரசின் இலக்கு அரசியல் சட்டம் தந்திருக்கும்  சம உரிமை. மத சார்பின்மை. அதை அகற்ற பாடுபடுகிறது பாஜக.

மதசார்பின்மையை அரசியல் சட்டத்தில் இருந்து அகற்றும் நேரத்தை எதிர் நோக்கி  இருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினாரா இல்லையா? 

அதனால் தான் முஸ்லீம்கள் இவர்கள் ஆட்சியில் இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று அஞ்சுகிறார்கள். தங்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள்.

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை திமுகவா தூண்டி விட்டது?

தேவையில்லாமல் ஒரு சட்டத்தை கொண்டுவந்து கலவரத்தை உருவாகிக்கியது பாஜக. அதற்கு முட்டுக் கொடுப்பது அதிமுக.

பொதுமக்கள் வேறு  குடிமக்கள்  வேறு  என்று பாகுபாடு கொண்டுவந்து சிலரை குடிமக்கள் ஆக்காமல் இருக்க சதித் திட்டம் தீட்டுகிறாகள் என்று முஸ்லீம்கள் அஞ்சுகிறார்கள்.

இந்தியர்களோ  அகதிகளோ ஊடுறுவல்காரர்களோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் மதப் பாகுபாடு மொழிப் பாகுபாடு காட்ட இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா என்பதுதான் இன்று  விடை காண வேண்டிய கேள்வி ?     

உச்சநீதிமன்றம் பதில் சொல்லும் வரை காத்திருங்களேன் ?

அதற்குள் சட்டத்தை நிறைவேற்ற மத்திய  அரசு துடிப்பது ஏன்?

 

This website uses cookies.