மதம்

முத்தலாக் மசோதா தோற்கும் எனத் தெரிந்தும் பாஜக நிறைவேற்றத் துடிப்பது ஏன்?

Share

முத்தலாக் மசோதா

முத்தலாக் எனப்படும் முஸ்லிம் விவாகரத்து முறையை செல்லாது என அறிவிக்கும் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி விட்டு மேலவையில் நிறைவேற்றமுடியாமல் தவிக்கிறது மோடி அரசு. காரணம் பெரும்பான்மை இல்லை.

இருபது முஸ்லிம் நாடுகளில் தடை சட்டம் இருக்கிறது என்று காரணம் சொல்லும் பாஜக அங்கெல்லாம் அது மூன்றாண்டு தண்டனைக்கு உரிய  குற்றமாக இல்லை என்பதை  ஏற்க மறுக்கிறது.

ஒரு சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்ற முயற்சிப்பது ஏன் என்ற கேள்விக்கு பாஜக விடம் பதில்  இல்லை.

முஸ்லிம் ஆண்களை மிரட்டுவது  மட்டும்தான் பாஜக வின் நோக்கமாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் திரண்டு வந்து ஆதரிப்பார்கள் என  எதிர்பார்த்தது நடக்க வில்லை.

அதில் உள்ள ஓட்டைகளை அடைத்து விட்டு நிறைவேற்றினால் எல்லா கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும். ஆனால் அதற்கு பாஜக தயாராக இல்லை.

அவசர சட்டம் கொண்டு வந்து எத்தனை நாட்களுக்கு உயிர் கொடுக்க முடியும்?

அஇஅதிமுக வின் அன்வர் ராஜா மிக கடமையாக எதிர்த்து பேசியிருக்கிறார். இது  முஸ்லிம்களுக்கு  எதிரான சட்டம் இல்லை. இறைவனுக்கு எதிரான சட்டம் என்று பேசியிருக்கிறார்.

எடப்பாடி என்னதான் முயன்றாலும் கட்சியை முழுவதும் பாஜக அடிமையாக மாற்ற முடியாது என்பதற்கு சான்றாக  தம்பிதுரை முதல் எல்லாரும் எதிர்த்து பேசியிருக்கிறார்கள் .

இந்த முயற்சி மூலம் மேலும் முஸ்லிம்களின் வெறுப்பை பாஜக சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.  அதனால் இந்துக்களின் ஆதரவை ஒன்று திரட்டி விடலாம் என்று பாஜக எதிர்பார்த்தால் அதுவும் நடவாது என்பதுதான் இன்றைய  நிலைமை.

This website uses cookies.