கிறிஸ்தவ நாடுகளில் பாதிப்புகள் அதிகமாக காரணம் என்ன?

Share

கொரொனாவிற்கு மதசாயம் பூசக்கூடாதுதான்.

ஆனால் விளைவுகள் அடிப்படையில் பார்த்தால் கிறிஸ்தவ நாடுகள்தான் அதிகம் உயிர் இழப்பை சந்தித்து உள்ளன.

நோய் தலை காட்டிய சீனாவில்  மூன்றாயிரத்தை தாண்டி அதிகம் செல்லவில்லை. ஆனால் குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில்தான் இழப்புகள்  அதிகம். எங்கோ இடிக்கிறது போல் தோன்றுகிறது அல்லவா ?

இன்றுவரை உலகத்தில் மொத்தம் உயிர் இழப்புகள் ஒரு லட்சத்து எட்டாயிரம் என்றால் அதில் கிறிஸ்தவ நாடுகள் மட்டுமே ஏறத்தாழ 90000 அளவுக்கு பலியானவர்கள் இருக்கிறார்கள் என்பது எதேச்சையானதா என்ற  கேள்வியை எழுப்புகிறது.

அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , இங்கிலாந்து , பெல்ஜியம் , ஜெர்மனி என்ற அந்த பட்டியல்தான் இந்த சிந்தனையை தூண்டுகிறது.

இதில் துளியும் சந்தேகப் பட ஏதுமில்லை என்பது புரிந்தாலும் இதுதான் உண்மை நிலை என்பதிலும் சந்தேகம் இல்லை.

இன்று ஈஸ்டர் திருநாள்.  ஏசுபிரான் உயிர்தெழுந்த நாளை உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் எழுச்சியுடன் கொண்டாடுவார்கள்.  ஆனால் இன்று எல்லா சர்ச்சுகளும் பாதிரியார்களைக் கொண்டே  வழிபாடை நிகழ்த்தி  பக்தர்களுக்கு இடம் இல்லாமல் செய்து விட்டார்கள்.

போப் ஆண்டவர் தனது ஆசி உரையை பக்தர்கள் இல்லாமல் நிகழ்த்தி வரலாற்றை ஏற்படுத்தி இருக்கிறார்.

இம்மாதம் கடைசிவரை  தடை நீடிக்கும் என்பதால் வர இருக்கும் ரம்ஜான் நோன்புகள் கூட அவரவர் வீட்டில் இருந்து கொண்டு  தொழுகை நடத்த வேண்டிய நிலைதான் தெரிகிறது.

கட்டுப்பாடு  நீடிக்கும் வரைதான் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்பதால் தொடரட்டும் கட்டுப்பாடு என்பதுதான் எல்லாருடைய விருப்பமும்.

This website uses cookies.