மதம்

மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க கோரும் எடப்பாடி யாகம் நடத்த அனுமதித்தது ஏன்?

Share

கொரானாவை தடுக்க  தமிழ்நாடு  அரசு கோவில்களில் யாகங்களை நடத்த அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.

ஒரு பக்கம் மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுக்கிறார். அது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலும் இப்போது ஞாயிறன்று கிறிஸ்தவர்கள் சர்ச்சில் கூடாமல் வீட்டில்  இருந்தபடியே ஜபம் செய்கிறார்கள். முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் இருந்தபடியே  தொழுது  பள்ளிவாசல்களை தவிர்க்கிறார்கள்.

இன்று தென்காசியில்  மட்டும் பள்ளிவாசலில் தொழுகை நடத்தியதற்கு  முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாகை நிஜாமுதீன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எனவே கோவில்களில் யாகம் நடத்த கொடுத்த அனுமதியை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

வழக்கமாக நடைபெறும் பூசைகளில் நோய் தடுப்பு பிரார்த்தனைகளை அர்ச்கர்கள் செய்தால் போதாதா ?

அரசு மதங்களில் இருந்தும் கடவுள்களிடம் இருந்தும் கொரானாவை ஒதுக்கி  வைக்க வேண்டும்.!

This website uses cookies.