மதம்

யாகத்தினால் மழை வந்ததா.. அறிவிப்பு பார்த்து யாகம் நடந்ததா??!!

Share

ஜூன் 23ம் தேதி மழை பெய்யலாம் என வானிலை அறிவிப்பு மையம் அறிவித்தது.

அதிமுக மந்திரிகள் யாகம் நடத்த அழைப்பு விடுத்தது ஜூன் 20ல். வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு யாகம் நடத்தினார்கள்.

ஜூன் 21, 22 தேதிகளில் சிறு தூறல்கள் சில இடங்களில் விழுந்தவுடன் பாஜக மாநில தலைவர் தமிழிசை ‘ஆகா யாகத்தினால் வந்தது மழை’ என்று அறிக்கை விடுகிறார்.    இவர்தான் சொல்லியிருப்பார்போல யாகம் நடத்த சொல்லி. இவருக்கு யார் சொன்னார்கள் என்பது இவருக்கு மட்டுமே வெளிச்சம்.

இந்திய வானிலை கழகம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 38% குறைந்து பெய்திருக்கிறது என்று அறிவிக்கிறார்கள். அதாவது சராசரியாக பெய்யும் 114.2 mm  மழைக்கு பதில் இந்த ஆண்டு கிடைத்தது 70.9 mm மட்டும்தான். இந்த குறைபாட்டுக்கு இயற்கையைத்தான் குறை சொல்ல வேண்டும்.

யாகம் வளர்ப்பவர்கள் பருவ மழை வருவதற்கு முன்கூட்டியே செய்திருந்தால் அவர்களது நம்பிக்கையை பாராட்டி இருக்கலாம். எப்போது வானிலை கழகம் மழை  வரும் என்று அறிவிக்கும் என்று காத்திருந்து யாகம் செய்தது போல் இருக்கிறது இவர்கள் செய்திருக்கும் யாக காரியம்.

திமுக  தலைவர் ஸ்டாலின் சொன்னது போல இவர்கள் யாகம் செய்தது மழை வருவதற்காக அல்ல. தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள இந்த யாகத்தை செய்திருக்கிறார்கள் .

யாகம் பதவியை காப்பாற்றுகிறதோ இல்லையோ மழையை கொண்டு வந்தால் நல்லதுதான்.

அதிமுக இனி தனது பிரசுரங்களில் பெரியார், அண்ணாவை கண்ணில் காட்ட மாட்டார்கள். ஷ்யாமா பிரசாத் முகர்ஜியையும் நரேந்திர மோடியையும் போட்டுக் கொள்வார்களா??!!

மழை வந்ததோ இல்லையோ அதிமுக தலைவர்களுக்கு பஞ்ச கச்சம் கட்டியாச்சா??!!பூணூல் போட்டாச்சா??!!

எவருடைய நம்பிக்கையையும் காயப்படுத்துவது நமது நோக்கமல்ல. நம்பிக்கைகளும் அறிவுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்??!!

யாகம் நடத்தியும் மழை வரவில்லையே??

யாகம் நடத்தியவர்களுக்குத்தான் யோகம்?!!

This website uses cookies.