Connect with us

கர்நாடக சிரூர் மடாதிபதி விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது தம்பி புகார்?!

இந்திய அரசியல்

கர்நாடக சிரூர் மடாதிபதி விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது தம்பி புகார்?!

மடாதிபதிகள் என்றாலே சர்ச்சைதான்.

இவர்கள் மதம் வளர்க்கிறார்களோ இல்லையோ அவர்களை சுற்றி எதிரிகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏனென்றால் இவர்கள் கையில் ஏராளமான சொத்துக்கள் நிர்வாகத்தில் இருப்பதால் சொத்தாசை பிடித்தவர்கள் போட்டி  போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சொத்துக்களை அவற்றின் வருமானங்களை வளைத்துப்போட கோஷ்டிகள் முயன்று கொண்டே இருப்பார்கள்.

உடுப்பி மாவட்டம் சிரூர் மடத்தின் 30 வது மடாதிபதி  54  வயதான லட்சுமி தீர்த்த சுவாமி.

சிரூர் மடாதிபதி லட்சுமி தீர்த்த சுவாமியின் வக்கீல் கூறுகையில் மடாதிபதி தன்னிடம் கடந்த மாதம் வந்து புத்திகே மடத்தை தவிர கிருஷ்ணா மடம் உட்பட ஆறு மடங்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என கோரியிருக்கிறார்.   அதற்கான ஏற்பாடுகளில் வக்கீல் இறங்கியிருந்த வேளையில் திடீர் என அவரது இறந்தது மர்மமாக உள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது.  காவல் துறையில் புகார் அளித்தவர் அவரது தம்பி லதாவியா ஆச்சார்யா.

அவரது உடல் அமர்ந்த கோலத்தில் வைக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் குமாரசாமி தேவைப்பட்டால் உரிய விசாரணை நடத்தப் படும் என்று தெரிவித்தார்.

மடாதிபதிகளுக்கு ஏன் சொத்து நிர்வாகம்.?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top