இந்திய அரசியல்

பூரி ஆலயத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவமதிக்கப் பட்டாரா?

Share

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு மனைவியுடன் சாமி கும்பிட சென்றிருக்கிறார்.

அங்கே ஆலய பணி செய்பவர்கள் அவரது பாதையை மறித்து நின்றும் அவரது மனைவியை அவமரியாதை செய்யும் வகையில் நடந்தும் கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவரின் அலுவலகம் தனது கடுமையான ஆட்சேபணையை  தெரிவித்து கடிதம் எழுதியது.

பிரச்னை பெரிதானதும் இப்போது அப்படி ஒரு கடிதம் எழுதப் படவே இல்லை என்று மறுக்கிறது.

குடியரசுத் தலைவர் ஒரு  தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கலாம் என்பதுதான் எழுதப் படாத சட்டம்.

இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஏன் மகாத்மா காந்தி கூட இப்படியே இந்தக் கோவிலில் அவமதிக்கப்  பட்டிருக்கின்றனர்.

களங்கம் ராம்நாத் கோவிந்துக்கு அல்ல.     கோவில் நிர்வாகத்துக்கே அவமானம்.

இந்து மதம் என்று அழைக்கப் படும் பார்ப்பன சமயத்தில் சமத்துவம் நிலவ இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்?

This website uses cookies.