இந்திய அரசியல்

கன்னியாஸ்திரியை கற்பழித்தாரா ஆயர் பிராங்கோ முலக்கல் ??!!

Share

கிறித்தவ மத நம்பிக்கை கொண்டோரை பதைக்கச் செய்யும் வகையில்
பாதிரிகள் மீதும் ஆயர்கள் மீதும் அவ்வப்போது பாலியல் குற்றச்சாட்டுகள்
இப்போது கொஞ்சம் அதிகம்தான்
ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர்
தன்னை பலமுறை கற்பழித்து விட்டதாக குற்றச்சாட்டு கூறி காவல் துறையில்
புகார் கொடுக்க பிரச்னை விஸ்வரூபமாகி நிற்கிறது
100 பள்ளிகள் 6 மருத்துவ மனைகள் 40 திருச்சபைகள் 800 கன்னியாஸ்திரிகள்
என்று முலக்கல் பணியாற்றும் இடம் பஞ்சாப் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் விரிந்து பரந்து கிடக்கிறது.

புகார் கொடுத்த வருக்கு ஆதரவாக கூட பணியாற்றும் கன்னியாஸ்திரிகள் திரள
இப்போது கேரளாவே கன்னியாஸ்திரி ஆதரவு பிஷப் ஆதாவு என்று பிரிந்து கிடக்கிறது.
பொதுமக்களும்கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக திரள
சட்ட மன்ற உறுப்பினர் பி சி ஜார்ஜ் புகார்கொடுத்தவரை ‘ தேவடியாள் ‘
என்றும் நடத்தை கெட்டவர் என்றும் திட்டி பேட்டி கொடுக்க
‘ வாயே மூடடா பி சி ‘ என்று இணைய தளத்தில் மீம்ஸ் பறக்க
என்னதான் நடக்கிறது திருச்சபையில் என்று அகில இந்தியாவே
கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. போப் வரைக்கும் இந்த புகார் சென்றும்
இன்னும் தீர்வு வந்தபாடில்லை.

இதற்கிடையில் திருச்சபை முலக்கல் உடன் அந்த கன்னியாஸ்திரி அமர்ந்து
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டது
சட்டப்படி குற்றமாக பார்க்கப் படுகிறது. அதற்கும் ஒரு புகார்.
கிறித்துவ சபைகள் போதனைகளை பிரச்சாரம் செய்வதை விட
பொதுத் தொண்டுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவை.
அங்கே கன்னியாஸ்திரிகள் எப்படி நடத்த ப்படுகிறார்கள்
என்று அறிய எல்லாருக்கும் உரிமை உண்டு.

கேரள உயர்நீதிமன்றம் பிஷப்பை கைது செய்வதா வேண்டாமா
என்பதை விசாரணை அதிகாரியே முடிவு செய்வர் என்றது.
முன்ஜாமீன் பெற பிஷப் ஆலோசித்து வருவதாக தகவல்
பாவ மன்னிப்பு கோரி பாதிரியிடம் குற்றத்தை ஒப்புக்கொண்ட
பெண்ணை கற்பழித்த பாதிரிக்கு என்ன தண்டனை கிடைத்தது?
பதனபுரம் என்ற இடத்தில் கன்னியாஸ்திரி சூசன்னா என்பவர்
தற்கொலை செய்து கொண்டு கிணற்றில் கண்டெடுக்கப் பட்டது
பதற்றத்தை கூட்டியுள்ளது.

ஆண்டவன் பேரால் அக்கிரமம் செய்வது
அவனுக்கே அடுக்காது.
காவல் துறை விசாரணைதான் இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

This website uses cookies.