இந்திய அரசியல்

தமிழ்த்தாய் வாழ்த்து-தேசிய கீதம் இசைக்காமல் மோடியின் அரசு நிகழ்ச்சி மீண்டும் நடந்ததன் காரணம் என்ன?

Share

மோடியின் அரசு நிகழ்ச்சி மீண்டும் நடந்ததன் காரணம் என்ன?

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் நாற்பதாயிரம் கோடி செலவிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

முன்பே மோடி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தேசிய கீதம் இசைக்காமல் ஒரு நிகழ்ச்சி நடந்த போதே ஏன் மோடிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை கேட்க விருப்பம் இல்லையா? அதற்காகவே தேசிய கீதமும் இசைக்காமல் அரசு நிகழ்ச்சி நடந்ததா என்ற கேள்வி எழுப்பப் பட்டது.

இப்போது மீண்டும் அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த செயல் தமிழர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு  காரணம் மாநில அரசா? மத்திய அரசா?

யாரேனும் விளக்கம் சொல்ல வேண்டாமா?

இதேபோல் மற்றவர்கள் அரசு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி விமர்சித்து இருப்பார்கள்?

மற்றவர்களுக்கு ஒரு நீதி  மோடிக்கு ஒரு நீதியா?

இவர்களின் நாட்டுப் பற்று ஒன்றும் விளங்கவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்திலும் தேசிய கீதத்திலும் திராவிட என்ற சொல் வருவதால் தவிர்க்கிறார்களா?

‘மோடிஜி’ என்று பாசத்துடன் அழைத்த எடப்பாடியும் ஒபிஎஸ்சும் விளக்கம் சொல்வார்களா? மௌனித்துப் போவார்களா?

This website uses cookies.