Connect with us

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எச் ராஜா மீது பாயுமா?

தமிழக அரசியல்

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எச் ராஜா மீது பாயுமா?

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா
தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில்
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில்
காவல் துறையை அவமதிக்கும் வகையில்
மிகக் கடுமையாக பேசியிருக்கிறார்.
என்ன செய்யப்போகிறது காவல்துறை என்று
தமிழகமே மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில்
பல முறை அவர் இப்படி பேசியிருக்கிறார்.
இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்
துணிவு அதிகமாகிவிட்டது.

நம் மீது நடவடிக்கை யார் எடுக்க முடியும்
என்ற அகந்தை தான் இதற்கு காரணம் .
எஸ்வி சேகர் , எச் ராஜா போன்றவர்களுக்கு
சட்டம் இங்கே வேற மாதிரி.
மற்றவர்களுக்கு சட்டம் வேறாகத்தான் இருக்கும்
என்பது தமிழ்நாட்டில் பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உயர் நீதிமன்றம் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களை
கலவரங்கள் ஏற்படாத வண்ணம் நெறிப்படுத்தி
நிபந்தனைகளை விதித்து உள்ளது .

அதைத்தான் காவல்துறை அமுல்படுத்த முயன்றிருக்கிறது.
அதை மீறி மேடை போடுவேன் பேசுவேன் என்று
எச் ராஜா முனைந்த போது தான் காவல்துறை தலையிட்டு தடுத்திருக்கிறது.
அப்போதுதான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி
எல்லாரையும் இழிவு படுத்தி இருக்கிறார் எச் ராஜா .
” ஹை கோர்ட் என்ன மயிரா”
” போலீஸ் எல்லாரும் ஊழல்வாதிகள்”
“கிறித்தவனிடமும் முஸ்லீமிடமும் லஞ்சம் வாங்கி இருக்கிறீர்கள்”
” நீங்கள் இந்து விரோதிகள் ”
“போலீஸின் ஈரல் அழுகிவிட்டது”
” யூனிஃபார்ம் போடஉங்களுக்கு தகுதி இல்லை”
” லஞ்சம் நான் தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் ”
” டிஜிபி வீட்டில் ரெய்டு வந்த பிறகு நீங்கள் யூனிபார்ம் போடலாமா”
இவைதான் ராஜா உதிர்த்த வார்த்தைகள்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறை
கெஞ்சிக் கொண்டு இருந்ததையும் விடியோவில் பார்த்தோம்.
ஏன் அப்போதே நடவடிக்கை எடுத்து
அவரை கலவரம் ஏற்படுத்த முயற்சித்ததற்காக காவல்துறை கைது செய்யவில்லை?
தங்க தமிழ்ச்செல்வன் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்த
தமிழக தலைமை அரசு வழக்கறிஞர் இப்போது அதே நடவடிக்கையை எடுப்பாரா?
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் எச் ராஜா வை கண்டித்து கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
காவல்துறையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்றால்
எச் ராஜா மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டாக வேண்டும்.
காத்திருப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top