இந்திய அரசியல்

ஆபரேஷன் காஷ்மீர் என்ன ஆகப்போகிறது?!

Share

முன்பே நிலை கொண்டுள்ள ராணுவ வீரர்கள் 35000 பேருடன் இப்போது அனுப்பப்பட்டுள்ள 35000 ராணுவ வீரர்கள் மற்றும் 26000 துணை நிலை ராணுவத்தினர் எல்லாம் சேர்த்து ஏறத்தாழ 96000 வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை பாதுகாக்கப் போகிறார்கள்.

உங்கள் பையன்கள் கல் எறியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அவர்கள்தான் நாளை பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்று எச்சரிக்கிறார் நமது ராணுவ தளபதி. கடந்த கால புள்ளி விபரங்களையும் தெரிவிக்கிறார்.

அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திடீர் என்று மேகபூபாவும் பாரூக் அப்துல்லாவும் அமித் ஷாவை சந்திக்கிறார்கள். காஷ்மீரை காஷ்மீர், ஜம்மு, லடாக் என்று மூன்று மாநிலங்களாக பிரிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.   

அமித் ஷா ஸ்ரீநகர் போனபோது எந்த தீவிரவாத அமைப்பும் கடை அடைப்பை அறிவிக்கவில்லை.

என்ன நடக்கிறது காஷிமிரில்?

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 35A, 370 களை நீக்கப்போகிறார்கள் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

அதனால் கலவரம் வெடிக்கும். அதை அடக்க தேவையான முன் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதனால்தான் இதை மோப்பம் பிடித்து தான் சமரசம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிக்கிறார். ஒதுங்கி இருங்கள் என்று இந்தியா கூறுகிறது.

ஆக தனது நெடுநாள் திட்டத்தை நிறைவேற்ற பாஜக முனைந்துவிட்டது என்பது உறுதியாக தெரிகிறது.

அதன் விளைவுகள்தான் இனிமேல் தெரிய வேண்டும்.

காத்திருப்போம் கவலையுடன் ?!

This website uses cookies.