இந்திய அரசியல்

காஷ்மீரில் சிறப்பு அதிகாரங்கள் பறிக்கப்பட்டால் என்ன நடக்கும்??!

Share

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 35A மற்றும் 370 பிரிவுகள் காஷ்மீர் மாநிலத்திற்கு என்று சிறப்பு அதிகாரங்களை அளிக்கிறது.

மகாராஜா ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது விதித்த நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக்கொண்டு தனது அரசியல் சட்டத்தில் அதற்கென சில பிரிவுகளை வகுத்தது.

அவைகளின் படி ராணுவம், தகவல் தொடர்பு, தவிர பிற துறைகள் தொடர்பாக இந்திய பாராளுமன்றம் இயற்றும் சட்டங்கள் காஷிமிரின் சம்மதம் இல்லாமல் காஷ்மீருக்கு பொருந்தாது. இந்திய சட்டங்கள் அனைத்திலும் அவை காஷ்மீர் தவிர இதர பகுதிகளுக்கு இது பொருந்தும் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

பிற மாநிலத்தவர் காஷ்மீரில் நிலங்கள் வாங்க முடியாது. ஆனால் அவரால் எங்கும் வாங்கலாம். காஷ்மீர் ஆண், வெளி மாநில பெண்ணை மணந்தால் அங்கே சொத்து வாங்கலாம் ஆனால் ஒரு காஷ்மீரியை மணந்த பெண் அங்கே சொத்துக்கள் வாங்க முடியாது. முக்கியமாக காஷ்மீர் மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ கூட்டவோ கூடாது.

அதேபோல் யார் நிரந்தர குடியிருப்பாளர் என்பதையும் அவர்களுக்கு மட்டுமே காஷ்மீரில் அரசு வேலை உதவி சலுகைகள் உண்டு என்பதையும் இந்த பிரிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

இதைஎல்லாம் இப்போது மோடி அரசு மாற்றப் போகிறது என்ற அச்சம் எல்லார மனதிலும் எழுந்திருக்கிறது.

யாத்ரீகர்களை திரும்புங்கள் என்றும் சுற்றுலா பயணிகளை வெளியேறுங்கள் என்றும் கெடுபிடிகள் செய்து வரும் மத்திய அரசு காஷ்மீரில் மத்திய அரசு என்னவோ  செய்யப்போகிறது என்ற அச்சத்தை மக்கள் மனதில் விதைத்துவிட்டது.

பாராளுமன்றம் ஆகஸ்டு ஏழாம் தேதி நிறைவுறும்போது செய்யப் போகிறதா இல்லை சில நாட்கள் கழித்து செய்யப் போகிறதா என்பது தெரியவில்லை.

உடனடியாக வேறு எந்த நாடும் இந்த பிரச்னையில் தலையிடாது என்றாலும் பிரச்னை முற்றினால் ஐநா தலையிடும் வாய்ப்பை தள்ள முடியாது.

எதுவாக இருந்தாலும் தீர்வு என்பது சம்பந்தப்பட்டோர் ஒத்துழைப்புடன் ஏற்பட்டால்தான் நிலைக்கும்.    

வலுவில் எந்த தீர்வையில் நிலைக்க வைத்து விட முடியாது.

அதை நினைவில்  கொண்டு இந்திய அரசு செயல்பட வேண்டும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.

This website uses cookies.