Connect with us

அழகிரியின் பேட்டி சொல்லும் செய்தி என்ன?

alagiri-karunanithi

தமிழக அரசியல்

அழகிரியின் பேட்டி சொல்லும் செய்தி என்ன?

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான்

கொல் எனும் சொல்

வள்ளுவம் வகுத்த நெறிக்கு புதிய உரை எழுத விரும்புகிறார் கலைஞரின் மகன் அழகிரி.

பின்னணியில் யார் என்பதுதான் மிகபெரிய கேள்வி.

பின்னணி இல்லாமல் பேசியிருக்க துணிவு வந்திருக்காது!

தந்தை எதை தன் உயிருக்கும் மேலாக மதித்து வாழ்ந்தாரோ அதற்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தில் செயல் படும் மகனுக்கு என்ன பெயர் சூட்டுவது?

ஊழல் ஆட்சியில் இருந்து மாநில சுயாட்சிக்கு உயிர் கொடுக்கும்  வகையில்  திமுக  ஆட்சிக்கு வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திமுகவுக்குள் குழப்பம் எனும் சூழ்நிலையை யார்

தோற்றுவித்தாலும் அவர்களை கலைஞர் மன்னிக்க மாட்டார்.

திமுக தொண்டர்கள் விபரமானவர்கள்.   அவர்களை யாரும் குழப்ப முடியாது என்பது வேறு.

ஆனால் எதிரிகள் இதை எப்படி எல்லாம் பயன் படுத்த முனைவார்கள்.?   அதுவும் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் தமிழகத்தை திராவிட சித்தாந்த ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க எதையும் செய்ய காத்திருக்கிறார்கள்.   எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

அப்படி இருக்கும்போது கட்சி எத்தனை கட்டுகோப்புடன் இருக்க வேண்டும்?

கலைஞர் உயிருடன் இருந்த போதே 2014 ன் ஆண்டு ஜனவரி மாதம் 24 ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து  பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் நிரந்தரமாவும் நீக்கப் பட்டார அழகிரி.

இப்போது அவர் திமுக வில் இல்லை. திடீர் என்று

கலைஞர் நினைவிடத்தில் நின்று கலைஞரின்

உண்மை விசுவாசிகள் என் பக்கம்தான்  என்று

சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

தனி கட்சி தொடங்க போவதில்லையாம்

ஒரு மாதம் கழித்து தன் திட்டத்தை சொல்வாராம்

அதுவரை மக்கள் காத்திருக்க வேண்டுமாம்.

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி இதுதானா?

குடும்பத்தை விட கட்சியை நேசித்த

கலைஞர் எங்கே? இவர் எங்கே?

கலைஞர் பெயரை சொல்லுகிற உரிமைகூட

இவருக்கு இருக்கிறதா?

கட்சிக்கு கடமை ஆற்றுங்கள் என்று அறிவுரை

கூறிய வீரமணியை -சோறுக்கு அலைகிறவர்

என்று விமர்சிக்கிறார் அழகிரி மகன்!

இவரால் ஒன்றும் ஆகாது என்றாலும் குழப்பத்தை

உண்டாக்க முடியுமே?   அதுதான் தொண்டர்களின் கவலை.

ஊடகங்கள் எத்தனை உற்சாகத்துடன் விவாதிக்கின்றன ?

நோக்கம் எப்போது எப்படி உடையும் விளைவென்ன

என்பதுதானே? நல்லதற்கா விவாதிக்கிறார்கள்?

எதிரிகள் முழு மூச்சுடன் சதி திட்டங்களை

நிறைவேற்ற தொடங்கி விட்டார்கள் என்பதுதான் செய்தி !

எத்தனையோ சோதனைகளை வெற்றிகரமாக சந்தித்த

திமுக இதையும் சந்தித்து வெல்லும்!!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top