Connect with us

செலவு செய்ய தெரியாமல் 3676 கோடி நிதியை திருப்பி அனுப்பிய அதிமுக அரசு?!

eps-ops

தமிழக அரசியல்

செலவு செய்ய தெரியாமல் 3676 கோடி நிதியை திருப்பி அனுப்பிய அதிமுக அரசு?!

ஒருபக்கம் மத்திய அரசு நிதி ஒதுக்க தவறுகிறது என்ற குற்றச்சாட்டு.

மறுபுறம் கொடுத்த நிதியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் தமிழக அரசு.

இந்திய அரசின் தலைமை தணிக்கையாளர் கொடுத்த அறிக்கையில் மத்திய அரசு கொடுத்த 3676.55 கோடி நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பிய விபரம் தெரிய வந்திருக்கிறது.

2017-2018ம் நிதி ஆண்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதி 5920.39 கோடியில்  தான் மேற்கண்ட துகையை திருப்பி அனுப்பி இருக்கிறது தமிழக அரசு.

நூறு நாள் வேலைத்திட்ட நிதியை கூட திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர் வீடு கட்டும் திட்ட நிதியில் மத்திய அரசு 60% மத்திய அரசும் மீதி  40% நிதியை தமிழக அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய அரசு நிதி திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழக அரசு தர வேண்டிய பங்கு நிதியை தர முடியாததால் திருப்பி அனுப்பப் பட்டதா என்பதும் தெரியவில்லை.

கிராமப்புற வேலை வாய்ப்பை பெருக்கும் திட்ட நிதியும் திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறது.

பல் திட்டங்கள் பயனாளிகளை அடையாளம் காண முடியாததால் திருப்பி அனுப்பப் பட்டது.

அதிமுக வினருக்கு ஆளத்தெரியவில்லை என்று குற்றம் சாட்ட முடியாது. தெரியும்.  ஆனால் செய்யவில்லை என்றால் என்ன காரணம். நிறைவேற்றி தங்களுக்கு என்ன பயன் என்பதுதான்.

தமிழக அரசு விளக்கம் தருமா?

கமிஷன் இல்லையேல் ஒமிஷன்தான் என்பதுதான் அதிமுக அரசின் கொள்கையா ?!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top