Connect with us

வன்னியர் எதிர்ப்பை மீறி தலித்துகளுக்கு கோவிலை திறந்து விட்ட வருவாய் அதிகாரிகள் !!!!

Latest News

வன்னியர் எதிர்ப்பை மீறி தலித்துகளுக்கு கோவிலை திறந்து விட்ட வருவாய் அதிகாரிகள் !!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஹரிஹரபாக்கம் கிராம வன்னியர்கள் அந்த ஊரின் அருள்மிகு துலுக்கானத்தம்மன் கோவிலில் பக்கத்து  நம்மண்டி காலனி தலித்துகளை வழிபட அனுமதித்ததே இல்லை.

காலனி இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து பல பேச்சு வார்த்தையிலும் முடிவு எட்டாததால் வன்னியர்கள் கோவிலை  பூட்டி  விட்டார்கள்.

செய்யாறு சப் கலக்டர் ஏற்பாட்டில் பூட்டை உடைத்து தலித்துகளை உள்ளே அனுமதித்தது மட்டும் இல்லாமல் வன்னியர்களிடம் தாங்கள் எவ்விதத்திலும் தலித்துகளை தடை செய்யமாட்டோம் என்றும் எழுதி வாங்கி தற்காலிக அமைதி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

காவல் துறை சில காலம் பாதுகாப்பு தரும்..   அதன் பின் யாரோ ஒருவர் பிரச்னையை கிளப்பினால் அது மீண்டும் அமைதியை குலைக்கும்.

ஏறத்தாழ தொண்ணூறு சதவீத கிராமங்களில் இதுதான் நிலை.

சாதி ஒழிப்பு கொள்கையில் ஒப்புமை கொண்ட திராவிட இயக்கங்கள் கூட இந்த சாதி சார்ந்த பாகு பாடுகளை ஒழிக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

;ஒன்றே குலம் ஒருவனே தேவன்  கொள்கையில் நம்பிக்கை கொண்டோர் அதை வாழ்க்கையில் அமுல்படுத்த முடிகிறதா?

திமுக அதிமுக நிர்வாகிகள் தங்கள் தங்கள் கிராமங்களில் இந்த சீர்திருத்தங்களை அமுல்படுத்த முனைந்தால் செல்வாக்கு  இழக்க நேரிடும் என்றே அஞ்சுகிறார்கள்.

ஏன் பா ம க வே கூட இந்த சீர்திருத்தத்தை அமுல் படுத்த தயாராக இருக்குமா?

இதைப் பற்றியும் ஒரு விவாதம் தொடங்கி நடந்தால் ஒருவேளை எதாவது வழி பிறக்கலாம்.

விவாதிப்போம்!!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top