Connect with us

தமிழ்நாட்டை துண்டாடி கைப்பற்ற முயற்சிக்குமா பாஜக ??!!

modi

தமிழக அரசியல்

தமிழ்நாட்டை துண்டாடி கைப்பற்ற முயற்சிக்குமா பாஜக ??!!

தமிழ்நாட்டில் மட்டுமே பாஜகவால் காலூன்ற முடியவில்லை.

எனவே அடுத்த குறி தமிழ்நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

என்ன செய்யும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் வரை தமிழ் இன உணர்வு மத ஆதிக்கத்தை வளர விடாது.

எனவே அவர்களை பலவீனப்படுத்த ஒரே வழி அவர்களைப் பிரிப்பதுதான். ஏற்கெனெவே மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார்.

அப்படி இரண்டு பேரை தயார் செய்து இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் ஆக பிரிக்க கோரிக்கை வைக்க தயார் செய்வதில் பாஜகவுக்கு பிரச்னை ஒன்றுமில்லை.

அதை வைத்து கோரிக்கையை நிறைவேற்றுகிற வகையில் தமிழகத்தை பிரிக்க பாஜக திட்டமிடலாம்.

ஏற்கெனெவே தெலுங்கு சமுதாயத்தை ஆந்திரா தெலுங்கானா என்று இரண்டாக பிரித்து வைத்த அனுபவம் இருக்கிறதே?

முன்பே சாதி வாரியாக கட்சிகளை பிரித்து அரவணைக்க பாஜக முயற்சித்தது. அது நிறைவேரவில்லை.

இப்போது முக்குலத்தோர், தேவேந்திரர் சமுதாயங்களுக்கு எனவும், கவுண்டர் சமுதாயத்துக்கு எனவும், வன்னியர் பட்டியல் வகுப்பினருக்கு எனவும், தமிழகத்தை மூன்றாக பிரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. 

அந்த முயற்சியை தமிழர் கட்சிகள் சாதி கடந்து ஒன்றுபட்டு எதிர்த்து நிற்காவிட்டால் தமிழ்நாடு உடைவது உறுதி!!

தங்கள் சொற்படி நடக்கும் கட்சிகள் ஆட்சி நடக்கா விட்டால் தமிழ்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஜக தமிழ்நாட்டை பிரிக்க தயங்காது. அதற்கு இன்னும் ஓரிரு வருடங்கள் தேவைப்படலாம்.

அதற்குள் அதிமுகவின் ஒரு பகுதி பாஜகவில் இணைந்தால் அந்த முடிவு தள்ளிப் போகலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top