Connect with us

பாலாற்று தடுப்பணையில் தற்கொலை செய்த தமிழக விவசாயி??!

tamil farmer suicide

Latest News

பாலாற்று தடுப்பணையில் தற்கொலை செய்த தமிழக விவசாயி??!

33  கிலோ மீட்டர் மட்டுமே பாயும் பாலாற்றில் ஆந்திர அரசு  22  தடுப்பணைகள் கட்டியிருக்கிறது.

புல்லூரில்   5   அடியில் இருந்து  12  அடியாக உயர்த்தும் வேலையை ஆந்திர அரசு துவங்கிய உடனேயே தமிழக அரசு விரைந்து செயல் பட்டிருந்தால் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிகுக்க முடியும்.

2006  ல் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்தும் கவலைப்படாமல் ஆந்திர அரசு தனது திட்டத்தை நிறைவேற்ற முனைந்தது அவர்களது நம்பிக்கையை காட்டுகிறது.   அதாவது  தமிழக அரசு விரைந்து செயல்படாது என்பது  அவர்களுக்கு  தெரிந்திருக்கிறது.

கனக நாச்சியம்மன் கோவிலில் இதுவரை தமிழக மின்தொடர்பு இருந்ததை மாற்றி ஆந்திர அரசு புதிய இணைப்பு கொடுத்ததை ஏன் இவர்கள் ஆட்சேபிக்கவில்லை.  ?

தமிழர்கள் கோவில் கட்டியபோது அவரகள் ஆட்சேபிக்க  வில்லை.

1892 ல் மதராஸ் அரசாங்கத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துகும்  ஒப்பந்தம் உள்ளது.             அதில் நீர்தேக்க பகுதிகளின் உயரத்தை அதிகரிக்க கூடாது என்று உள்ளது.

ஐந்து மாவட்டங்களுக்கு  குடிநீர் தேவைகளுக்கும்  4.2 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு  விவசாயம் செய்யவும் தமிழ் நாட்டுக்கு பாலாற்று நீர் தேவை இருக்கிறது.

தமிழக அரசு கால தாமதமாக உச்சநீதிமன்றம் சென்றதால் உடனடியாக தடையாணை பெற முடியவில்லை.

அப்பொழுதே உங்களுக்கு ஹைதராபாத்தில் சொத்துக்கள் இருப்பதால் நடவடிக்கை எடுக்க தயங்கு கிறீர்களா என்று ஜெயலலிதாவை பார்த்து ஸ்டாலின் கேட்டார்.

அதற்குள் ஆந்திர அரசு 5   அடியில் இருந்து   12  அடியாக அணையை உயர்த்தி விட்டது.       நீர் ததும்பி வடியும்  நிலையில்  தமிழக எல்லைக்குள் நீர் வரவில்லை.

இதனால் பாதிக்கப் பட்ட சீனு என்ற தமிழக விவசாயி  அதே அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கொடுமை என்னவென்றால் தமிழக முதல்வர் ஜெயலலிதா   சீனு   அணையில் தவறி விழுந்து இறந்து விட்டதாகவும் அவரது குடும்பத்துக்கு  மூன்று லட்ச ரூபாய்  இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறார்.

சுற்றியிருக்கும் எல்லா மாநிலங்களோடும்  தண்ணீர் பிரச்சினைக்காக உச்ச நீதிமன்றம் அல்லது ஆணையம் சென்றுதான் தீர்ப்பு வாங்க வேண்டிய நிலை நீடிப்பது சரியல்ல.

பேச்சு வார்த்தை தொடர வேண்டும்.     முடியும்போது அதற்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும் . அதற்கு நீதிமன்றத்தை நாடலாம்.     மாறாக பக்கத்து மாநிலங்களோடு நீதி மன்ற மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று நம்புவது நல்ல நிர்வாகம் ஆகாது.

நீதிமன்ற நடவடிக்கை தொடர்கின்ற அதே நேரம் பேச்சு வார்த்தையும் தொடர வேண்டும்.

ஜெயலலிதா அதற்கெல்லாம் தயாராக இருப்பாரா??!!!

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top