Connect with us

கட் அவுட்டுக்கு அண்டா பால் கேட்டு கவுந்திட்டியே சிம்பு??!!

simbu-vantha-rajavathan-varuven

பொழுதுபோக்கு

கட் அவுட்டுக்கு அண்டா பால் கேட்டு கவுந்திட்டியே சிம்பு??!!

தனது கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் எல்லாம் செய்ய வேண்டாம் என்று  முன்பு சிம்பு அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கேட்கிறார்களோ இல்லையோ நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று நடிகர்கள் சொன்னால் கொஞ்சமாவது ரசிகர்கள் திருந்துவார்கள்.

அஜித்தின் கட் அவுட்டிற்கு பால் ஊற்றுகிறேன் என்று ரசிகர்கள் கட் அவுட்டோடு கீழே விழுந்து ஒருவர் இறந்தார் என்பது துயர செய்தி.

இன்றைக்கும் ரஜினி ரசிகர்கள் பால் ஊற்றுவதை அவர் கண்டிப்பதோ வேண்டாம் என்று அறிவுறுத்துவதோ இல்லை. ரசிக்கிறார் என்றுதானே அர்த்தம்.

தமிழன் மானம் கப்பல் ஏறுவதை ரசிக்கிறீர்கள்.

தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஒரே தொடர்பு வாக்கு செலுத்துவதே என்றும் அறிக்கை விடுத்தது அஜித்குமார் முதிர்ச்சியை காட்டி இருக்கிறார். பாராட்டும் குவிகிறது. இனி அஜித்துக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

நம்ப சிம்புவுக்கு என்ன வந்தது. யாரோ உனக்கு இரண்டு மூன்று ரசிகர்கள் . அதனால்தான். பால் அபிஷேகம் வேண்டாம் என்கிறாய் என்று சொன்னார்களாம் .

உடனே ஒரு  பேட்டி கொடுத்து பாக்கெட் பால் எல்லாம் வேண்டாம் அண்டா அண்டாவா ஊற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறார். தனக்கும் ஆள் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள ஆள் வைத்து ஊற்றிகொள்கிறார் என்று சொன்னால் என்ன செய்வார்.

இதன் மூலம் எல்லார் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது மட்டுமே மிச்சம்.

சிம்பு தனது நடவடிக்கைகளில் முதிர்ச்சியை காட்ட வேண்டும்.

திறமையுள்ள நடிகர் இது போன்ற சில்லறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு மதிப்பை குறைத்துக் கொள்கிறாரே என்ற நல்ல எண்ணமே நமது கண்டனம்.

பால் முகவர்கள் சிம்பு மீது நடவடிக்கை கேட்டுவழக்கு போட்டிருக்கிறார்கள். இதுவும் விளம்பர உத்தியா?

நீ ராஜாவா வா! வரவேற்கிறோம்! கொண்டாடுவோம்.

இதுமாதிரி பேட்டி கொடுத்து காமெடி செய்யாதே??!! கூஜாவாகி விடுவாய்!!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in பொழுதுபோக்கு

To Top