Connect with us

இட ஒதுக்கீட்டுக்கு குழி பறிக்கும் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ?!!

mohan-bhagwat1

இந்திய அரசியல்

இட ஒதுக்கீட்டுக்கு குழி பறிக்கும் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ?!!

ரெட்டை நாக்குக்கு பேர் பெற்றவர்கள் ஆர் எஸ் எஸ் தலைவர்களும் அதன் கிளை பாஜக தலைவர்களும்.

ஒரே நேரத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் பேசுவார்கள், மேல் மட்ட தலைவர்கள் கூடாது என்றும் பேசுவார்கள்.

அதாவது இறுதி இலக்கு இட ஒதுக்கீடு ஒழிப்பு.

அப்படித்தான் சில நாட்களுக்குமுன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும்போது ‘இட ஒதுக்கீடு வேண்டும் என்போரும், வேண்டாம் என்போரும் உட்கார்ந்து பேசி ஒரு சுமுக சூழ்நிலையில் ஒரு முடிவுக்கு வர வேண்டும்’ என்று பேசி உள்ளார்.

இட ஒதுக்கீடா இன்றைய முக்கிய தலையாய பிரச்னை.? இட ஒதுக்கீட்டின் மூலம் என்ன? பிற்பட்ட தாழ்த்தப்பட்டோர் கல்வி வேலை வாய்ப்புகளில் மிகவம் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதுதானே?

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இட ஒதுக்கீட்டின் பலன்கள் அவர்களுக்கு கிடைதிருக்கிறதா என்பதை ஏன் புள்ளி விபரங்களுடன் ஆய்வு செய்ய வில்லை? எல்லாருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் கிடைத்து  இருந்தால் பிறகு இட ஒதுக்கீடு தேவை  இல்லை. ஆய்வு செய்து புள்ளி விபரங்களை வெளியிடாதது யார் தவறு? வெளியிட்டால் இன்னமும் மேற்குலத்தார் ஆதிக்கம் நீடிக்கிறது என்பது தெரிந்துவிடும் என்பதால் தானே? 

அதைப்பற்றி மோகன் பகவத் பேசாமல் இட ஒதுக்கீட்டை ஒழிப்பது பற்றி பேசுகிறார் என்றால் இவர்களின் தந்திரத்தை மக்கள் உணர மாட்டார்கள் என்று இன்னும் நம்புகிறார் என்றுதான் பொருள் .

சாதி ஒழிப்பை சட்ட பூர்வமாக்கப்படுவது பற்றி ஆர் எஸ் எஸ் பேசட்டும்.

அதைக்கூட பேசுவார்கள் ஏனென்றால் பார்ப்பனீயத்தை ஒழிக்கவே முடியாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

சாதி வேறு பார்பனீயம் வேறு என்பார்கள்.

கீழ்பட்ட இரண்டு சாதிகளுக்கு இடையே மோதலை வளர்த்து இடையில் குளிர் காய நினைப்பது ஆர் எஸ் எஸ் வழக்கம். அதுதான் பாஜகவுக்கும் இன்று கைகொடுத்துக்  கொண்டிருக்கிறது.

போதுமான வளர்ச்சி யை உறுதி செய்யும் வரை இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top