இந்திய அரசியல்

முதல் அமைச்சர் வாகன அணிவகுப்பில் பறிமுதல் செய்யப்பட்ட 1.8 கோடி ரூபாய்??!!

Share

பிரதமர் மோடி அருணாச்சல் பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய செல்கிறார்.

அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்க அந்த மாநில முதல் அமைச்சர் பீமா காண்டு ஒரு வாகன அணிவகுப்பில் செல்கிறார். ஒரு காரில் செய்யப்பட்ட சோதனையில் ரூபாய் 1.8 கோடி பறிமுதல் செய்யப்படுகிறது.

காரில் வந்தவர்கள் தங்கள் உறவினர்கள் ஒரு வேலைக்காக இந்த பணத்தை கொடுத்ததாக கூறினார்கள்.

எந்த வேலையாக இருந்தாலும் அவர்கள் ஏன் நள்ளிரவில் அந்த பணத்தை முதல்வரின் வாகன அணிவகுப்பில் எடுத்து செல்ல வேண்டும்? அதுவும் தேர்தல் நேரத்தில்!!

தமிழகத்தில் காவல் துறையின் பாதுகாப்போடு அதிமுக வினரின் தேர்தல் செலவுப் பணம் கடத்தப் படுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.

பாஜக கூட்டணியில்  இருந்தால் எதையும் செய்யலாம் என்பதை அருணாச்சல பிரதேச சம்பவம் நிருபித்து இருக்கிறது.

காங்கிரஸ் புகார் செய்ய இருக்கிறது. என்ன செய்யப் போகிறது தேர்தல் கமிஷன் ???!!

This website uses cookies.