Connect with us

இட ஒதுக்கீடால் சமுதாயம் முன்னேற முடியாதாம்??!! டாக்டர் கிருஷ்ணசாமியின் பிதற்றல்??!!

krishnaswamy

தமிழக அரசியல்

இட ஒதுக்கீடால் சமுதாயம் முன்னேற முடியாதாம்??!! டாக்டர் கிருஷ்ணசாமியின் பிதற்றல்??!!

இட ஒதுக்கீடு வந்திராவிட்டால் இன்றைக்கு தாழ்த்தப்பட்டோராகவும்,
பிற்பட்டோராகவும், மிக பிற்பட்டோராகவும் இருப்பவர்கள் முன்னேறி இருக்கவே
முடியாது. இந்த அடிப்படை அறிவு எல்லாருக்கும் இருக்கிறது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு
இல்லாமல் போனதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.
இட ஒதுக்கீட்டை ஒழிக்கத்தானே பார்ப்பனர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் .
அவர்களுக்கு துணை போவதுபோல் இருக்கிறது கிருஷ்ணசாமியின் பேச்சு.

சமூக நீதியை தவறாக புரிந்து கொள்கிறோமாம்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு சமுதாயம்
மேலாதிக்கம் செய்தது என்று ஒப்புக் கொள்ளும் கிருஷ்ணசாமி
ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றத்துக்கு
அந்த ஒரு பார்முலாவை மட்டும் பயன் படுத்துவது சரியல்ல என்கிறார்.
ஏதோ ஒரு ஏற்பாடு அவரை இப்படி பேச வைத்திருக்கிறது என்று மட்டும் புரிகிறது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பலர்
எப்படியெல்லாம் பேசப் போகிறார்களோ?

முன்பே அவர் பா ஜ க வுடன் நெருங்குகிறார் என்று செய்தகள் வந்தன.
இப்போது உறுதி பட்டு விட்டது
இடஒதுக்கீடு வருவதற்கு முன் – பின் என்று புள்ளி விபரங்களை
அவர் ஆராய்ந்தாரா என்று தெரிய வில்லை.
ஆதிக்க சக்தியிடம் ஆட்பட்டு விட்டார் என்று மட்டும் தெரிகிறது.
இரண்டு கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார்.
அதில் இட ஒதுக்கீடு குறித்து அவர் கூறிய கருத்துக்கள் தான்
நமக்கு சரி என்று படவில்லை
காட்டிக்கொடுக்கும் வேலையை இதைவிட சிறப்பாக செய்யமுடியாது.
எல்லாரும் இட ஒதுக்கீடுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது
இவர் மட்டும் வேண்டாம் என்றால் அதற்கு என்ன பெயர்?
திருமாவளவனும் ஜான் பாண்டியனும் இதர தலித் தலைவர்களும்
ஒப்புக் கொள்வார்களா?

இன்றைக்கும் கூட இட ஒதுக்கீடு எந்த அளவு சாதித்திருக்கிறது
என்பதற்கு புள்ளி விபரம் வேண்டுமா வேண்டாமா?
சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் சராசரியாக
ஐம்பது சதம் அளவுக்கு முன்னேறி சமமாகத்தான்
வாழ்கிறார்கள் என்றால் இட ஒதுக்கீடு தேவையில்லைதான்!
அந்த நிலை வந்து விட்டது என்று எதை வைத்து சொல்கிறார்?
கடுமையான கண்டனத்துக்கு உரிய கருத்து இது.

அடுத்து பள்ளன், காலாடி, கடையன் , குடும்பன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான்
ஆகிய ஆறு பேரையும் தேவேந்திர குல வேளாளர் என்று வகைப்படுத்தி
பட்டியல் வகுப்பிலிருந்து அவர்களை நீக்க வேண்டும் என்பது
அவரது அடுத்த கோரிக்கை.

இதில் ஜான் பாண்டியனும் இவரும் ஒரே கருத்தில் இருக்கிறார்கள்.
பொருளாதார ரீதியிலும் , சமுதாய ரீதியிலும், கல்வி ரீதியிலும்
இவர்கள் முன்னேறி விட்டார்கள் என்று இவர்களே ஒப்புகொண்டால்
பட்டியல் வகுப்பிலிருந்து நீக்க யாருக்கும் ஆட்சேபணை இருக்காது.
எஸ் சி என்ற முத்திரை முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக
இருக்கிறது என்ற இவர் கருத்தும் ஆராய்ச்சிக்குரியது.
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கலைஞர் தந்த போது
இவர் எதிர்த்தது ஏன்? அவர்கள் மீது இவருக்கு அக்கறை இல்லையா?
அவர்கள் பங்கை அவர்களுக்கு கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?

ஒட்டு மொத்தமாக் சாதி ஒழிப்பு இலட்சியமாக இருக்க வேண்டும்
என்று சாதித் தலைவர்கள் ஒவ்வொரு முறையும் சொல்லிக்
கொண்டே இருக்கிறார்களோ அன்றுதான் அவரகள் மதிக்கப் படுவார்கள்.
தமிழர் என்று அனைவரும் இணைவோம் என்பதே இறுதி இலட்சியம்
என்பதை இவர்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.!
இல்லைஎன்றால் சாதியை வைத்து தங்கள் இருப்பை செல்வாக்கை
தக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்ற பழி உங்கள் மீது தங்கி விடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top