இந்திய அரசியல்

ராஜீவ் காந்திக்கு ஒரு போபர்ஸ்!! நரேந்திர  மோடிக்கு ஒரு  ரஃபேல்??!!

Share

போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தி பெயர் அடிபட்டு

அதன்  காரணமாகவே  தேர்தலில் தோல்வியை சந்தித்தார்

கடைசி வரை அந்த ஊழல் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டாமலேயே போனது

ஆனால்  அதன் தாக்கம் கடைசி வரையில் இருந்தது

இன்றுவரை காங்கிரசால் போபர்ஸ் பீரங்கி ஊழல் கறையில்  இருந்து தப்ப முடியவில்லை

 

இன்று பிரதமர் நரேந்திர மோடி  அரசு ரபேல் போர் விமானங்கள்

கொள்முதல்விவகாரத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது

ஊழலற்ற அரசு என்று மோடி அரசு இனி மார்தட்டிக் கொள்ள முடியாது

பிரதமர் இது குறித்து   வாய் திறக்க மறுக்கிறார்.

 

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு

2012ல்   126 விமானங்களுக்கு ஒப்பந்தம் போட்டது

ஒரு விமானத்தின் விலை 526 கோடி

2015ல் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்ற போது

தானாக முடிவெடுத்து 36 ரபேல் விமானங்கள்  வாங்க

ஒப்பந்தம் செய்கிறார்

ஒரு விமானத்தின் விலை 1670 கோடி

 

இதுதான் இப்போது பிரச்சினை ஆகி இருக்கிறது

இந்த  விலை உயர்வு காரணம் யார்?

வெறும் 36 ரபேல் விமானங்களாக  குறைக்கப்பட்டது ஏன்?

இதில் பிரச்சனை ஆகி இருப்பது அனில் அம்பானியின்

ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் உற்பத்தி கம்பெனிக்கு

 வணிக கூட்டாளியாக   ஆனதுதான்

 

முன்னாள்  பிரான்ஸ் பிரதமர்  ஹாலண்டே

ரிலையன்ஸ் நிறுவனம்  சேர்க்கப்பட்டது இந்தியா சொல்லித்தான் என்கிறார்

இந்திய அரசு தனக்கு தொடர்பு இல்லை என்கிறது

எது உண்மை?

கடனில் தவிக்கும் அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் கம்பெனிக்கு

உதவும் நோக்கத்தில்  பிரதமர் மோடி செய்த மாற்றம் இது என்று

 காங்கிரசும்  ராகுல் காந்தியும்  குற்றம் சுமத்துகிறார்கள்

 

பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்கிறது காங்கிரஸ்

தேவை இல்லை என்கிறது  மோடி அரசு

மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்

நீதிமன்றம்  தலையிட்டால் மட்டும் தான் உண்மை வெளிவருமா ?

வெளிப்படைத்தன்மை இல்லை என்பதில் சந்தேகமில்லை

ராணுவ ரகசியம்  இதில் என்ன இருக்கிறது?

 

இதே நிறுவனம் வேறு நாடுகளுக்கும் இதே விமானத்தை விற்பனை செய்திருக்கிறது

அந்த நாடுகள் கொடுக்கும்  விலையைவிட

நாம் ஏன் அதிக விலை தர  வேண்டும்?

எந்த காரணம் கொண்டும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்

என்று  பிடிவாதம் செய்கிறது மோடி அரசு

 

விமானத்தின் தரம் தேவை பற்றியெல்லாம் எந்த கேள்வியும் எழவில்லை ஏனென்றால் உலக நாடுகள் பலவும் ஒப்புக்கொண்ட தரம் அது

கேள்வி ஒன்றுதான்

டசால்ட் ஏவியேஷன்நிறுவனம்  தனது தொழில் கூட்டாளியாக

ரிலையன்ஸ் நிறுவனத்தை  தானாக சேர்த்துகொண்டதா ?

அல்லது இந்திய அரசு சொல்லி சேர்த்துக் கொண்டதா ?

 இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம்

30,000 கோடி ரூபாய்  ஆதாயம் அடைய யார் காரணம்?

 

Offset contract  ல் ( உள் ஒப்பந்தந்தில் ) இந்திய அரசின் தலையீடு இல்லை

என்பது உண்மை என்றால் பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஏன்

இந்திய அரசு முடிவு செய்தபின் எங்களுக்கு வேறு வழி இல்லை

என்று சொல்ல வேண்டும்?

எனவே விசாரிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் இதில்

நிறையவே இருக்கின்றன. .

மோடி அரசின் இன்னொரு முகம் இதில் வெளிப்பட்டிருக்கின்றது .

இது தேர்தலின் நிச்சயம் பிரதிபலிக்கும்.

This website uses cookies.