இந்திய அரசியல்

நாடாளுமன்றத்தில் ராகுல் மோடிக்கு செய்த கட்டிப்புடி வைத்தியம்??!!

Share

நாடாளுமன்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான  விவாதத்தில் உறுப்பினர்கள் பேசிய விவாதங்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு ராகுல் மோடிக்கு செய்த கட்டிப்புடி வைத்தியம் பேசுபொருளாகி விட்டது.

தெலுகு தேசம் கட்சி தங்களுக்கு மோடி அரசு மாநில பிரிவினையின் பொது  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை  என்று நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தது.

அதில் ராகுல் ஆவேசமாக மோடி அரசின் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

பதிலுக்கு மோடியும் ஆவேசமாக பேச இறுதியில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்றுப் போனது.

ஆனால் தான் பேசி முடித்த பின் ராகுல் செய்த காரியம் யாரும் எதிர்பாராதது .

நேராக மோடியிடம் போய் எழுந்திருங்கள் என்று சொல்ல அவர் எழுந்திருக்காமல் அமர்ந்தே இருக்க இவர் அவரை குனிந்து கட்டிப் பிடிக்க அசையாமல் இருந்த மோடி பின் ராகுலை அழைத்து சில வார்த்தைகள் பாராட்டி சொல்ல ராகுல் திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் கட்சி உறுப்பினர்களை பார்த்து கண் சிமிட்ட , எல்லாம் ஒரு நாடகம் போலவே அமைந்து விட்டது.

சிவசேனா கட்சி ராகுல் பேச்சை மிகவும் பாராட்டியது.    கால் பந்து போட்டியை ஒப்பிட்டு கோப்பையை பிரான்ஸ் வென்றிருந்தாலும் மனங்களை வென்றது குரோஷியா தான் என்றது.   அதைப்போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி வென்றாலும் மக்கள் மனங்களை  வென்றது ராகுல்தான் என்றது.

ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ராகுலின் நடவடிக்கை ஏற்கத் தக்கது அல்ல என்றார்.

இதுவரையில் நாடாளுமன்றத்தில் இப்படி நடந்தது இல்லை.

ராகுல் நடந்து  கொண்டது கண்ணியமா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

This website uses cookies.