இந்திய அரசியல்

பழிவாங்கப்படும் ப. சிதம்பரம் ??!!

Share

டெல்லி உயர் நீதிமன்றம் ப .சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுத்திருக்கிறது .

ஆறு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள். அத்தனையும் அவரது பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பானவை. எனவே எந்த ஆட்சியாளரும் தனது காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எப்போதுமே கவலைப்பட்டாக வேண்டும் என்ற நிலைமை தோன்றி விட்டது.

சிபிஐ பழி வாங்குகிறதா தன் கடைமையை செய்கிறதா என்பதே கேள்வி?

இதே வழக்கில் அவரது மகன் கார்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.    வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பிணையல் வெளியே வந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகி விட்டார்.

ப சிதம்பரம் முன்னாள் நிதி, உள்துறை அமைச்சர் என்பதை தாண்டி இப்போது பாராளுமன்ற உறுப்பினர். தப்பியோடி விட முடியாது. அவர் மீது என்ன வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும். அதை மூத்த வழக்கறிஞர் ஆன அவர் சட்டப்படி சந்திப்பார்.

அவரின் பாஸ்போர்ட்டை கூட முடக்கட்டும். ஆனால் வழக்கை பதிவு செய்து நடத்துவதில் காட்டும் அக்கறையை விட அவரை கைது செய்து சில நாட்களாவது உள்ளே வைத்து விட வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறதா சிபிஐ என்ற சந்தேகம் தான் அதிகமாக இருக்கிறது.

தலைமறைவாகும் அளவு அவர் தன் கடைமையை உணராதவர் அல்ல ப.சிதம்பரம்.

அனேகமாக நாளை உச்ச நீதிமன்றம் இது பற்றி ஒரு உத்தரவை இடும் என்று நம்பப்படுகிறது. 

அதற்குள் எல்லா தொலைக் காட்சிகளும் சிதம்பரம் தலைமறைவு, ஒளிந்து கொண்டார் என்றெல்லாம் செய்தி வெளியிடுகிறார்கள். அது பொறுப்பான செய்கை  அல்ல. பாஜக வை மகிழ்விக்க வேண்டுமானால் அது உதவும்.

பாஜகவின் கொள்கைகளை மத்திய அரசின் நடவடிக்கைகளை மிகவும் பலமாக விமர்சித்து வருபவர் ப.சிதம்பரம். அவருக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க பாஜக விரும்பியிருக்கலாம். அதற்கு விசாரணை அமைப்புகளை பயன் படுத்துவதுதான் தவறு.

சிபிஐ சுதந்திரமான அமைப்பு அல்ல என்பது நிரூபணமாகி வருகிறது.

This website uses cookies.