இந்திய அரசியல்

13% மட்டுமே வாக்களித்த ஸ்ரீநகர் தொகுதி இந்தியாவின் ஒரு பகுதி ??!!

Share

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக சட்டப்படி நீடிக்கிறது. ஆனால் உணர்வு பூர்வமாக காஷ்மீரிகள் இந்தியர்கள் ஆனார்களா?

ஆறு பாராளுமன்ற தொகுதிகள் கொண்ட மாநிலம் இரண்டு முஸ்லிம் குடும்பங்களால் ஏமாற்றப்பட்டு வந்திருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.    அப்துல்லா குடும்பத்தையும் முப்தி குடும்பத்தையும் குறித்தே அவர் பேசினார்.

இந்து முஸ்லிம் பௌத்த மதங்களால் பிரிக்கப்பட்ட பூமியாக அந்த மாநிலம் விளங்குகிறது.

நேற்று நடந்த தேர்தலில் வெறும் 13% மட்டுமே ஸ்ரீநகர் தொகுதியில் பதிவானது.

அதேநேரம் இந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் 68% வாக்கு பதிவானது.

இவ்வளவு குறைந்த அளவு மக்கள் பங்கேற்று உள்ள இந்த தேர்தல் எப்படி மக்கள் ஆட்சியை பாதுகாக்கும்.?

செல்லுபடியாகும் தேர்தலுக்கு குறைந்தபட்சம் எத்தனை சதம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஒரு விதி வேண்டும்.

இல்லாவிடில் தேர்தல் ஒரு கேலிக்கூத்து ஆகிவிடும்.

நேற்று வரை பாஜக வுடன் கூட்டு வைத்து இருந்த பிடிபி கட்சி இன்று எதிரியாகி விட்டது. ஆக நான்குமுனை போட்டி நிலவுகிறது.

யார் வென்றாலும் குறைந்த சத ஆதரவே இருக்கும்.

கேள்விக்குறியாகவே நீடிக்கும் காஷ்மீர் பிரச்னை எப்போது முடிவுக்கு  வரும் ? 

This website uses cookies.